Breaking News

விக்கினேஸ்வரனின் பாதை பயங்கரமானது - சம்பிக்க கூறுகிறார்

தேசிய ஐக்­கி­யத்தை பலப்­ப­டுத்த வேண்­டு­ மாயின் புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை நோக்கி சிந்­திக்க வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­க­ளையும் எம்­முடன் இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க புதிய அர­சியல் அமைப்பே சிறந்த வழி­மு­றை­யாகும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ ­ரனின் பாதை பயங்­க­ர­மா­னது. ஆனால் தமிழ் மக்கள் பிரி­வி­னையை முழு­மை­யாக வெறுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்­சியின் நிலைப்­பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும், நல்­லாட்­சி­யையும் பலப்­ப­டுத்தி ஒரு ஆண்டு நிறை­வ­டைந்­துள்­ளது. இந்த ஓராண்டு காலத்தில் நாட்டில் மூவின மக்­களும் அமை­தி­யாக வாழக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்மை மக் கள் அர­சாங்­கத்­துடன் கைகோர்த்து செயற்­ப­டக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அதேபோல் சட்ட, நீதி செயற்­பா­டுகள் சுயா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்டு மக்கள் நீதியின் செயற்­பாட்டின் மீது நம்­பிக்கை கொண்டு செயற்­படும் வகையில் ஆரோக்­கி­ய­மான சூழல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் ஊழல், மோச­டிகள் இல்­லாத ஒரு அர­சி யல் கலா­சாரம் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. 

முக்­கி­ய­மாக சிறு­பான்மை மக்­களை இணைத்­துக்­கொண்டு ஐக்­கிய இலங்கை என்ற நிலை யில் செயற்­படும் வாய்ப்­புகள் அதி­க­மாக ஏற்­பட்­டது. கடந்த காலத்தில் சர்­வ­தேச நாடுகள் எமக்கு எதி­ராக மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மானம் ஒன்றை கொண்­டு­வந்து எம்மை கட்­டு­ப­டுத்த முயற்­சித்­தன. அதேபோல் நாட்டில் பிரி­வி­னைக்­கான சூழல் ஒன்று வடக்கில் உரு­வாகி வந்­தது. சர்­வ­தேச நாடு­களின் உத­வி­யு­டனும், சர்­வ­தேச அமைப்­பு­களின் முழு­மை­யான ஆத­ர­வு­டனும் வட­மா­கா­ணத்தில் ஒரு முரண்­பாட்டு சக்தி பல­ம­டைந்து வந்­தது. 

அத்­தோடு மக் கள் மத்­தியில் முரண்­பா­டு­களும் விம­ர்­சனங்­களும் பல­ம­டைந்து காணப்­பட்­டது. பொரு ­ளா­தார ரீதியில் சிக்கல் நிலை­மைகள், நாட் டின் தேசிய அபி­வி­ருத்­தியில் பாரிய முடக் கம் என நாட்டை வீழ்த்தும் பாதையில் அர­சாங்கம் பய­ணிக்க ஆரம்­பித்­தது. எனினும் அவ்­வா­றான ஒரு நிலை­மையில் இருந்து நாட்டை காப்­பாற்றும் தெளி­வான வேலைத்­திட்டம் ஒன்று மஹிந்த அர­சாங்­கத்தில் இரு க்­க­வில்லை.

அவ்­வாறு இருக்­கையில் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் நாட்டில் பாரிய திருப்பம் ஒன்று ஏற்­பட்­டது. அதா­வது ஆட்சி மாற்­ற த்தின் பின்னர் கூட்டு அர­சாங்­க­மாக நம் அனை­வரும் அந்த அழுத்­தங்­களில் இருந்து விடு­ப­டக்­கூ­டிய நிலைமை ஒன்று ஏற்­பட்­டது. நாடு மோச­மான பாதையில் பய­ணித்த நிலையில் நாட்டை மீட்­டெ­டுக்க எம்மால் முடிந்­தது. அதேபோல் மூவின மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து நாட்டில் பல­மான ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தது. எனினும் இந்த ஜனநா­ய­கத்தை மேலும் பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் அடிப்­ப­டையில் பலப்­ப­டுத்த வேண்டும். அதை புதிய அர­சியல் அமைப்பு மாற்­றத்தில் மட்­டுமே மேற்­கொள்ள முடியும். அதற்­கான முயற்­சி­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

எனினும் நாட்டில் புதிய அர­சியல் அமை ப்பு ஒன்றை உரு­வாக்கி நாட்டை துண்­டாட முயற்­சிப்­ப­தாக இன­வாத பிரி­வினர் பொய்­ யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஆனால் நாளை பாரா­ளு­மன்­றத் தில் இந்த அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்­பி­லான ஆலோ­சனை மற்றும் அது தொடர்பில் ஆராயும் குழு­வி­னரை நிய­மிக் கும் நட­வ­டிக்கை மட்­டுமே மேற்­கொள்­ளப்­படும். அதன் பின்னர் ஆராய்ந்தே இறுதி முடிவு எடுக்­கப்­படும். ஆனால் புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை நோக்கி பய­னி­ப தால் நாட்டில் எந்­த­வித பிரி­வி­னையும் ஏற் ­ப­டாது. தமிழ் முஸ்லிம் மக்­க­ளையும் எம்­முடன் இணைத்து பய­ணிக்க இதுவே சிறந்த வழி­மு­றை­யாகும்.

நிறை­வேற்று அதி­காரம் நீக்­கப்­பட்ட பின் னர் பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்கள் பலப்­ப­டுத்­தப்­படும். அவ்­வா­றான நிலையில் பிர­த­ம­ரு க்கு கட்­டுப்­பட்ட வகை­யி­லேயே மாகா­ண­ச­பைகள் செயற்­பட வேண்டும்.

வட மாகாண முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தவ­றான பாதையில் பய­ணிக்­கின்றார். இன்றும் அவர் பிரி­வி­னை­வாத நிலைப்­பாட் டில் தான் உள்ளார். காரணம் என்­ன­வெனில் அமிர்­த­லிங்கம், செல்­வ­நா­யகம் எவ்­வாறு தனி­நாட்டு போராட்­டத்தின் மூலமாக தமிழ் மக்களின் தனித்துவ தலைவர்கள் ஆனா ர்களோ அதேபோல் இவரும் ஒரு தலை வராக முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் சமூகம் பிரிவின வாத கொள்கையை முழு மையாக வெறுக்கின்றனர். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தை பலப் படுத்தும் வேலைத்திட்டத்தில் கடந்த காலத்தில் இணைந்து கொண்டனர். பாராளு மன்றத்திலும் அர சாங்கத்தை ஆதரி த்து செயற்படுகின்ற னர். இது ஜனநாயக ரீதியிலான ஒரு செயற்பாடாகும்.