Breaking News

நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்! உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் ஆதங்கம்

எமக்­கான விடு­தலை விட­யத்தில் நாம் தொடர்ந்தும் ஏமாற்­றப்­பட்டுக் கொ-ண்­டே­யி­ருக்­கின்­றோ­மென தமிழ் அர­சியல் கைதிகள் ஆதங்கம் வெளியிட்­டுள்­ள­தாக அவர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை மீண்டும் ஆரம்­பித்­துள்ள தமிழ் அர­சியல் கைதிகள் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதிகள் பலரின் உடல்நிலை சோர்­வுடன் காணப்­பட்­ட­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

இது தொடர்பில் உற­வி­னர்கள் ஊடாக அர­சியல் கைதிகள் கருத்து வெளியி­டு­கையில்,

நாம் ஐந்­தா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை தொடர்ந்­த­வண்­ண­முள்­ளளோம். இருப்­பினும் எமது விடு­தலை தொடர்­பாக தற்­போது வரையில் எந்­த­வி­த­மான வாக்­கு­று­தி­களும் வழங்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றது.

சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எம்மில் பலர் விசா­ர­ணை­யின்றி இருக்­கின்­றார்கள். அதே­நேரம் வழக்கு தொடுக்­கப்­பட்­ட­வர்கள், தண்­டனை அளிக்­கப்­பட்­ட­வர்கள், மேன்­மு­றை­யீடு செய்­த­வர்கள் எனக் பலர் காணப்­ப­டு­கின்­றார்கள். அவ்­வா­றாக உள்­ள­வர்­களின் விடு­தலை தொடர்­பாக எந்­த­வி­த­மான வாக்­கு­று­தி­களும் அர­சாங்­கத்­த­ரப்பால் வழங்­கப்­ப­ட­வில்லை.

அது­தொ­டர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அத்­த­கை­யோ­ருக்­கான நிரந்­தர தீர்வு என்ன என்­பது தற்­போது வரையில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யி­லேயே உள்­ளது. ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இவ்­வி­டயம் தொடர்­பாக இறு­தித்­தீர்­மானம் எடுக்கும் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்­கின்றார். எனவே அவரின் நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மான அறி­விக்­க­வேண்டும்.

அவ்­வா­றான அறி­விப்பே நிண்­ட­கா­ல­மாக சிறைக்­கூ­டங்­களில் வாடிக்­கொண்டு தற்­போது விடு­த­லைக்­காக உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­துள்ள எமக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

நாம் நீண்­ட­கா­ல­மாக உற­வு­களைப் பிரிந்து நான்கு சுவர்­க­ளுக்குள் முடக்­கப்­பட்டு எமது எதிர்­கா­லமே கேள்­விக்­கு­றி­யான நிலையில் இன்­றி­ருக்­கின்றோம். எம்மை நம்­பி­யுள்ள பிள்­ளைகள், பெற்­றோர்கள், உற­வி­னர்கள் என அனை­வ­ருமே எதிர்­பார்ப்­புக்­க­ளு­டனும், ஏக்­கத்­து­டனும் பொழு­து­களை கழித்து வரு­கின்­றார்கள். அன்­றாட வாழ்க்­கையை நகர்த்­த­மு­டி­யாத நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வா­றான நிலையில் எமக்கு பிணை­ய­ளிப்­ப­தாக கூறி மீண்டும் மீண்டும் வெவ்­வே­று­பட்ட பிர­தே­சங்­களில் காணப்­படும் நீதி­மன்­றங்­க­ளுக்கு அழைப்­ப­தா­னது மென்­மேலும் சுமையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.

எனவே எமக்கு பொது மன்­னிப்பே இறுதி தீர்­வாக கரு­து­கின்றோம். எமது கோரிக்­கையின் யதார்த்­தத்தை உணர்ந்து அதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறு நாட்டின் தந்­தை­யான ஜனா­தி­ப­தி­யிடம் தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­கின்றோம் எனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.