Breaking News

இலங்கை மீதான தீர்மானம் தமிழருக்கு நீதியைப் பெற்றுத்தருமா?

ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மானம் மிகவும் பல­வீ­ன­மா­ன­தாகும். இத்­தீர்­மானம் தமிழ் மக்­க­ளுக்கு உண்­மை­யான நீதியைப் பெற்றுத் தருமா என்­பதில் சந்­தேகம் நில­வு­வ­தாக முன்னாள் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். 

நீதியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தமிழ் மக்கள் தொடர்ச்­சி­யாக போராட வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்­ள­தாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை இலங்­கையில் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் தென்­னா­பி­ரிக்­காவில் கடந்த 6, 7 ஆம் திக­தி­களில் நடை­பெற்­றது. இது­தொ­டர்­பி­லான விளக்­க­ம­ளிக்கும் பத்­தி­ரி­கை­யாளர் மாநாடு யாழ். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

குறித்த கலந்­து­ரை­யா­டலில் முன்னாள் ஐ.நா.வின் மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரான நவ­நீ­தம்­பிள்­ளையும் தனது கருத்­துக்­களை முன்­வைத்தார். அதற்­க­மைய ஐ.நா.வில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக கூறினார். அவ­ரு­டைய கருத்­தின்­படி மிகப் பல­வீ­னப்­பட்ட தீர்­மானம் இது. இத்­தீர்­மானம் தமிழ் மக்­க­ளுக்கு உண்­மை­யான நீதியைப் பெற்றுத் தருமா? என்ற கேள்­வி­யையும் எழுப்­பி­யி­ருந்தார். அத்­துடன் எமக்­கான நீதியை பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனின் நிதிக்­காக போரா­டு­வதன் மூலம் தான் பெற்றுக்கொள்­ள­ மு­டியும் என தெளி­வாக அவர் கூறி­யி­ருந்தார்.

புலம்­பெயர் நாடு­க­ளி­லி­ருந்து தமிழ்ப் பிர­தி­நி­தி­களும் ஈழத்தில் இருந்து பிர­தி­நி­தி­க­ளு­மாக குறித்த கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டோம். இந்த கலந்­து­ரை­யா­டலில் தென்­னா­பி­ரிக்க கேர்­பனில் உரு­வாக்­கப்­பட்ட பரிந்­து­ரைகள் என்ற அடிப்­ப­டையில் 7 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இதனை தென்­னா­பி­ரிக்க அர­சுக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் ஒரு ஆரம்­ப­கட்ட பரிந்­து­ரை­யாக நாம் கூறி­யுள்ளோம்.

ஒரு­ வி­சா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்க இருக்­கின்ற நிலையில் இலங்கைத் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு குழுவை ஏற்­ப­டுத்தித் தரு­மாறு தென்­னா­பி­ரிக்­கா­விடம் இலங்கை அர­ சாங்கம் கேட்­டி­ருக்­கின்ற நிலையில் இலங்கை அர­சு­ட­னான தொடர்­பா­டலை தென்­னா­பி­ரிக்கா வைத்­தி­ருப்­ப­த­னாலும் இந்தத் தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் இந்த பேச்­சுக்கள் அமைய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி இத்­தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

இதற்­க­மைய கடந்த அக்­டோபர் 1ஆம் திகதி பொறுப்­புக்­கூறல், இன நல்­லி­ணக்கம் தொடர்­பான தீர்­மானம் நிறை­வே­ற்றப்­பட்­டது. அந்தத் தீர்­மானம் தொடர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர், நிதி­ய­மைச்சு, அமைச்­ச­ரவை பேச்­சாளர் போன்ற ஒவ்­வொ­ரு­வரும் முரண்­பட்ட பேச்­சான சமிக்­ஞை­கள்தான் வெளி­யிட்­டுள்­ளனர். இதனை நாம் பார்க்கும் போது சர்­வ­தேச பொறி­முறை தேவை­யில்லை. விசா­ர­ணையை நாம் உள்­நாட்டில் மேற்­கொள்­ள­ மு­டியும் என்ற வகையில் அவர்­க­ளு­டைய நிலை­யுள்­ளது.

இந்­நி­லையில், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் கருத்துப் பரி­மா­று­வ­தற்கு முன்­பாக இலங்கை அரசு தனது உண்­மை­யான நோக்கம் என்ன? தாங்கள் எதை நோக்கி போகப்போகிறோம் என்­பதை முதலில் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இவற்றை தென்­னா­பி­ரிக்க அரசு மிக தெளி­வாக இலங்கை அர­சுக்கு சொல்ல வேண்டும். ஏனைய நாடு­களும் இந்த விடயம் தொடர்­பாக இலங்கை அர­சுக்கு சொல்­ல­வேண்டும். அதன் பின்பு தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் பேசு­வ­தற்கு சரி­யான சூழல் ஏற்­படும் என்­பது முக்­கிய விடயம் என்­பது முத­லா­வ­தான தீர்­மா­ன­மாக எடுக்­கப்­பட்­டது.

மாறி மாறி வந்த இலங்கை அர­சாங்கங்கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­மிட்ட வகை­யி­லான குற்­றங்­களை புரிந்துகொண்­டு ­வந்­துள்­ளன. அவற்றை யாரும் மறு­த­லிக்க முடி­யாது. உண்­மை­யாக தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரி­மைக்­கான அர­சியல் போராட்­டத்தை தோற்­க­டிக்­கவே தமிழர் தேசம் மீது திட்­ட­மிட்ட தாக்­கு­தல்கள், குற்­றங்கள் புரி­யப்­பட்டு வந்­துள்­ளன. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்­களை இழைக்கப்­பட்­டன என்­பதை இந்த அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாக ஏற்றுக்கொள்­ளா­விட்டால் நிச்­ச­ய­மாக அமைதி, சமா­தானம், நீதி என்­பன வெறும் கதை­யாகத் தான் இருக்கும்.

இந்த விடயம் தொடர்­பாக ஏற்­க­னவே தமிழ்­நாடு சட்­ட­சபை, வடக்-கு மாகாண சபை மற்றும் ஜன­நா­யக நிறு­வ­னங்கள் வேறும் சில அர­சாங்­கங்கள் என்­பன தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி உள்­ளன என்­பதை கரு­திற்­கொண்டு இதை அர­சாங்கம் ஏற்­ப­த­னூ­டாக தான் இவை இனி­மேலும் நடக்­காமல் அவர்கள் வந்து தங்­க­ளது பங்கை ஆற்ற முடியும் என்­ப­தையும் தீர்­மா­ன­மாக கேர்பன் மாநாட்டில் இரண்­டா­வ­தாக சொல்­லப்­பட்­டுள்­ளது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்­ட­மி­டப்­பட்டு இரா­ணுவ மய­மாக்­கப்­பட்­டன. இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு தொடர்­பா­க வும் அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் உண்­மையில் மக்­க­ளுக்குத் தொடர்ச்­சி­யான விரக்­தி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த இரா­ணு­வ­ம­ய­மாக்கல் செயற்பாட்டால் தமிழ் மக்­களின் இயல்பு வாழ்க்கை மிகமோச­மா­னது. இதனால் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்­க­ளுக்கு போகமுடி­யாத சூழ்நிலை உருவாகியுள்­ளது. வடக்கு, கிழக்கில் இருந்து இரா­ணுவ வெளி­யேற்றம் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தா­கவும் அமையும் என 3 ஆவது தீர்­மா­னத்தில் உள்­ளது.

நான்­கா­வது தீர்­மா­னத்தில் 10 இலட்சம் தமிழ் மக்கள் வெளி­நாடு சென்­றுள்­ளனர். ஆகவே தமிழ் மக்­க­ளி­னு­டைய உரி­மைகள் விடு­தலை என்­பதில் அவர்­களின் பங்­க­ளிப்பு என்­பது முக்­கி­ய­மா­னது. ஆகவே அவர்­களில் ஒரு பகு­தி­யினர் மீது தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் அவர்கள் சுதந்­தி­ர­மாக இங்கு வந்துபோக முடி­யாது என்­பதும், அவர்கள் வந்­து­போக முடி­யா­ததன் கார­ண­மாக நீதியை, சமா­தா­னத்தை இங்கு உரு­வாக்­கு­வ­தற்கு அவர்­களில் பங்­க­ளிப்பைப் பெற்றுக் கொள்­ள­ மு­டி­யாமல் இரு­ப்பது என்ற விடயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. எனவே வெளி­நாட்­டி­லுள்ள ஒரு­ப­கு­தி­யி­னர் மீதான தடைகள் முற்­றாக நீக்­கப்­பட வேண்டும் என்­பதும் ஓர் தீர்­மா­ன­மாக எடுக்­கப்­பட்­டது.

அடுத்த தீர்­மா­ன­மாக பயங்­க­வாதத் தடைச் ­சட்டம், 6 ஆவது திருத்தச் சட்­டம் போன்­ றன அகற்­றப்­ப­ட­வேண்டும் என்றும், அடுத்து தடுப்பில் உள்­ள­வர்­களின் முழு­மை­யான பட்­டியல் வெளி­யி­டப்­ப­ட­ வேண்டும் என்­பதும் அது எந்­த­வ­கை­யான தடுப்பு முகாம்­களில் இருந்­தாலும் சரி, இரா­ணுவ முகாம்­களில் இருந்­தாலும் சரி, அல்­லது சிறைக்­கை­தி­க­ளாக இருந்­தாலும் சரி, அனை­வ­ரி­னதும் பெயர்கள் வெளிப்­ப­டுத்­த­ப்பட வேண்டும். அத்­துடன் கைதிகள் முழு­மை­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதும் சொந்த வாழ்வில் சுமு­க­மான நிலை ஏற்­ப­ட­வேண்டும் போன்­றன ஒரு கோரிக்­கை­யான தீர்­மா­ன­மாக அங்கு நிறை­வேற்­றப்­பட்­டது.

ஆறா­வ­தாக சித்திரவதை, மிரட்டல், துன்பு றுத்தல், பாலியல் வன்முறை, வெள்ளை வான்

கடத்தல் என்பன இலங்கையில் நடை பெறுவதாக மனித உரிமை அமைப்புக்கள் 2014 ஆம் ஆண்டு பட்டியலிட்டுக் கூறி யுள்ளன. எனவே மேற்குறித்த எல்லாம் இலங்கையில் இன்றும் நடைபெறுவதை இந்த அரசு ஏற்றுக்கொண்டு அவை மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இறுதியாக யுத்தத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்துள்ளனர். அதில் அவர்

களை நினைவுகூரும் விடயம் இலங்கை அரசினால் தடைசெய்த விடயமாக உள் ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி, ஏனையோரும் கூட தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இழந் துள்ளனர். ஆகவே அவர்களும் நினைவு கூருவதற்கான சரியான சூழல் உருவாக் கப்பட வேண்டும் என்ற விடயம் இறுதித் தீர்மானமாக எடுக்கப்பட்டது என்றார்.