Breaking News

கலப்பு நீதிமன்றமா? இல்லையா? ஜனவரியிலேயே இறுதி தீர்மானம்! என்கிறார் மங்கள

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் போர்க்­குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலுவ­லகம் பரிந்­து­ரைத்­துள்ள விசேட கலப்பு நீதி­மன்­றத்தை அமைப்­பதா இல்­லையா என்­பது குறித்த இறுதி தீர்­மானம் அடுத்த வருடம் ஜன­வரி மாத இறு­தியில் எடுக்­கப்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். 

சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்­களை இலங்­கைக்கு வர­வ­ழைத்து உள்­ளக விசா­ர­ணையை மேற்­கொள்­வதா அல்­லது உள்­நாட்டு நீதி­ப­தி­க­ளைக்­கொண்டு விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெடுப்­பதா? என்­பது தொடர்­பிலும் ஜன­வரி மாதமே தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜன­வரி மாதம் தொடக்கம் 18 மாதங்­களில் உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு முடிவு செய்­யப்­படும். இதன்­போது இரா­ணுவ வீரர்கள் யாரா­வது குற்­ற­மி­ழைத்­துள்­ளமை நிரூ­பிக்­கப்­ப­டு­மானால் தரா­தரம் பாராது தண்­டனை வழங்­கப்­படும். இதற்கு முன்­னரும் இவ்­வாறு உதா­ர­ணங்கள் உள்­ளன என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

அறிக்கை

அனை­வரும் எதிர்­பார்த்த்­தி­ருந்த இலங்கை குறித்த ஜெனிவா மனித உரிமை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரினால் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. தற்­போது அதன் பிர­திகள் அனைத்து உறுப்பு நாடு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இந்த அறிக்கை இவ்­வாறு வரு­வ­தற்­கான பின்­ன­ணியை கூறி­யா­க­வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் இலங்­கைக்கு விஜ­யம்­செய்­த­போது பான் கீ மூனும் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இணைந்து கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டனர். அந்த கூட்­ட­றிக்­கையில் யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போக் குற்­றங்கள் குறித்து சுயா­தீன நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்­கப்­படும் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது.

நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­று­திகள்

அதே ஆண்டில் இலங்கை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்­தது. அந்த பிரே­ர­ணை­யிலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போக் குற்­றங்கள் குறித்து சுயா­தீன நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்­பா­கவும் அர­சியல் தீர்வு தொடர்­பா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு நிறை­வேற்ற முடி­யாத பல்­வேறு வாக்­கு­று­தி­களை சர்­வ­தேச வழங்­கிய முன்­னைய அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தையும் உள்­நாட்­டையும் முழு­மை­யாக ஏமாற்­றி­யது. இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணையில் இலங்கை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­ததன் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்டும் என கோரப்­பட்­டது. அதற்கு அமைய மூன்று நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

சர்­வ­தேச விசா­ரணை கத­வுகள் திறக்­கப்­பட்­டன

அதா­வது உள்­நாட்டில் எம்மால் தீர்க்­கப்­ப­டக்­கூ­டிய ஒரு பிரச்­சி­னையை சர்­வ­தேசம் வரை கடந்த அர­சாங்­கமே கொண்டு சென்­றது. சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கத­வு­களை கடந்த அர­சாங்­கமே திறந்­தது. இந்­நி­லையில் கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானார்.

அதன் பின்னர் நான் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பொறுப்­பேற்றேன். கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 29 ஆவது கூட்­டத்தில் கலந்­து­கொண்டேன். அந்த கூட்டத் தொடரில் வெளி­யி­டப்­ப­ட­வி­ருந்த இல­ஙகை குறித்த விசா­ரணை அறிக்­கையை பிற்­போ­டு­மாறு கேட்டேன். அதற்கு இணங்க 30 ஆவது கூட்டத் தொடர் வரை அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­லேயே மனித உரிமை மீறல்கள் குறித்து உள்­ளக விசா­ர­ணையை நடத்­து­வ­தாக கூறி­யி­ருந்தோம்.

4 முக்­கிய விட­யங்­க­ளுடன் உள்­ளக பொறி­முறை

அதற்­காக நான் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை தயா­ரிப்­ப­தற்­காக கட்­ட­மைப்பை உரு­வாக்க ஒரு விசேட குழுவை நிய­மித்தேன். அதன்­படி தேவை­யான ஆலோ­ச­னை­களை நடத்­தி­யி­ருந்தோம். அதன்­படி அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறை நான்கு பிரி­வு­களை கொண்­ட­தாக அமைந்­துள்­ளது.

முத­லா­வ­தாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நிறு­வப்­படும். அதில் இரண்டு பிரி­வுகள் இருக்கும். அதா­வது மத தலை­வர்­களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணை­யா­ளர்­களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்­கப்­பட்ட மக்கள் இதன்­மூலம் நீதியை பெறலாம். தென்­னா­பி­ரிக்­காவின் ஆலோ­ச­னை­யுடன் இதனை முன்­னெ­டுப்போம்.

இரண்­டா­வ­தாக சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்­கத்தின் உத­வி­யுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­படும். மூன்­றா­வ­தாக நீதிக்­கான உரி­மைக்­காக நீதி­மன்ற பொறி­முறை உரு­வாக்­கப்­படும். அடுத்­த­தாக இழப்­பீடு பொறி­முறை உரு­வாக்­கப்­படும்.

இறு­தி­யாக கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­களை போன்ற எந்­த­வொரு பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது இருக்க தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். இதுதான் நாம் திட்­ட­மிட்­டுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறைக் கட்­ட­மைப்­பாகும்.

ஜன­வரி மாதம் இறுதி தீர்­மானம்

ஆனால் இது இறுதி பொறி­முறை அல்ல. இதனை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் ஒக்­டோபர் இரண்டாம் வாரத்தில் இருந்து கலந்­து­ரை­யா­டல்­களும் ஆலோ­ச­னை­களும் நடத்­தப்­படும். ஜன­வரி மாதம் நடுப்­ப­கு­தியில் அந்தக் கலந்­து­ரை­யா­டல்கள் முடி­வ­டைந்து இறுதி பொறி­முறை தீர்­மா­னிக்­கப்­படும்.

கலந்­து­ரை­ய­த­டல்­களில் மத தலை­வர்கள் அர­சி­யல்­வா­திகள் சிவில் சமூக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளி­னதும் ஆலோ­ச­னைகள் பெறப்­படும். இதன்­போது தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை குறித்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களும் கவ­னத்­திற்­கொள்­ளப்­படும்.

18 மாதங்­களில் முடியும்

ஜன­வரி மாதம் முதல் 18 மாதங்­களில் இந்த உள்­ளக விசா­ரணை பொறி­முறை அமுல்­ப­டுத்தி முடிக்­கப்­படும். இதன்­போது சர்­வ­தேச ஆலோ­ச­னைகள் தொழில்­நுட்ப உத­விகள் பெறப்­படும். இதனை சர்­வ­தே­சத்தை திருப்­தி­ப­டுத்­து­வ­தற்­கா­கவோ அல்­லது சர்­வ­தேச அழுத்­தத்­தி­னாலோ செய்­ய­வில்லை. மாறாக இதுதான் எம்­மிடம் காணப்­ப­டு­கின்ற இறுதி வழி­மு­றை­யாக உள்­ளது. எனவே அதனை முன்­னெ­டுக்­கின்றோம்.

பக்­கச்­சார்­பற்ற அறிக்கை

இதே­வேளை ஐ.நா. வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யா­னது மிகவும் பக்­கச்­சார்­பற்ற முறையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பெயர் விப­ரங்கள் எதுவும் இல்லை. சம்­ப­வங்கள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. புலி­களின் மீறல்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. எமது உள்­ளக விசா­ரணை பொறி­முறை ஊடாக இரா­ணு­வத்­தி­னரின் இழக்­கப்­பட்­டுள்ள கீர்த்­தியை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­புவோம்.

இரா­ணு­வத்­தி­னரில் யாரா­வது குற்றம் இழைத்­தி­ருந்தால் அதற்கு யார் உயர்­மட்­டத்­தி­லி­ருந்து கட்­ட­ளை­யிட்­டது என்­ப­தனை தேடிப்­பார்ப்போம். அவ்­வாறு யாரா­வது தவ­றுகள் செய்­தி­ருந்தால் தரா­தரம் பாராது தண்­டனை வழங்­கப்­படும். இதற்கு முன்­னரும் இவ்­வாறு தண்­டனை வழங்­கிய உதா­ர­ணங்கள் உள்­ளன.

உதா­ர­ணங்கள்

தெற்கில் ஜே.வி. பி. பிரச்­சி­னை­யின்­போது மனம்­பேரி என்ற அழகி கொல்­லப்­பட்டார் அது தொடர்பில் விசேட நீதி­மன்றம் அமைத்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டது. கிரு­ஷாந்தி கொலை வழக்கில் சந்­தி­ரி­காவின் காலத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக தண்­டனை வழங்­கப்­பட்­டது. தமிழ் இளை­ஞர்­களின் சட­லங்கள் ஒரு குளத்தில் மிதந்த வர­லாறு எம்­மிடம் உள்­ளது. அதற்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்­க­பட்­டது.

குற்­ற­மி­ழைக்கும் ஒரு­சில இரா­ணுவ வீரர்­க­ளுக்கு தண்­டனை அளிப்­பதன் மூலம் முழு இரா­ணு­வ­த­தி­னதும் புகழை மேலோங்க செய்ய முடியும். ராஜ­பக்ஷ ஆட்­சி­யின்­போது உயர்­மட்ட கட்­ட­ளை­க­ளினால் இரா­ணு­வத்தின் புகழ் இல்­லாமல் போனது. இம்­முறை ஜெனி­வாவில் எமக்கு அனைத்து நாடு­களும் ஆத­ரவு வழங்கும். கடந்த ஜன­வரி மாதம் மஹிந்த ராஜ­பக்ஷ வெற்­றி­யீட்­டி­யி­ருந்தால் பாரிய விளை­வுகள் ஏற்­பட்­டி­ருக்கும். ஐ.நா. அறிக்­கையும் வேறு வடிவில் வந்­தி­ருக்கும். கடந்த மார்ச் மாதமே பெயர் விப­ரங்­க­ளுடன் அறிக்­கையும் வந்­தி­ருக்கும். தற்­போ­தைய நேரத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையும் ஆரம்­ப­மா­கி­யி­ருக்கும்.

பொரு­ளா­தார தடைகள்

அமெ­ரிக்­காவும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களும் இலங்­கைக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை­க­ளையும் விதித்­தி­ருக்கும். அமெ­ரிக்­கா­வு­ககும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்­குமே எமது நாட்டின் ஏற்­று­ம­திகள் செல்­கின்­றன.

கேள்வி -எமது நீதித்­து­றையில் சர்­வ­தேச நாடுகள் திருப்­தி­ய­டை­யுமா?

பதில் -கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் எமது நீதித்­துறை காணப்­பட்ட விதத்தை பார்க்­கும்­போது எம்மால் உடை அணிந்­து­கொண்டு எமது நீதித்­து­றையை நம்­புங்கள் என்று கூற முடி­யாது. முன்னாள் ஜனா­தி­ப­தியின் மகன் எவ்­வாறு சட்டக் கல்­லூ­ரிக்­கான பரீட்சை எழு­தினார் என்று அனை­வ­ருக்கும் தெரியும். அப்பா எவ்­வாறு நீதித்­து­றையை கையாண்டார் என்றும் அனை­வ­ருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் ஆட்­சிக்கு வந்து நீதித்­து­றையை சுயா­தீ­ன­மாக்­கினோம். ஆனால் 10 வருட விவ­கா­ரத்தை ஒரே இரவில் மாற்ற முடி­யாது. ஆனால் எம்­மிடம் சிறந்த நீதி­ப­திகள் உள்­ளனர். அவர்­களை வைத்து நாம் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்போம்.

கேள்வி - ஐ.நா. அறிக்­கையில் கலப்பு விசேட நீதி­மன்றம் அமைக்­க­வேண்டும் என்று கூறி­யுள்­ளதே-?

பதில்- போர்க்­குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் பரிந்­து­ரைத்­துள்ள விசேட கலப்பு நீதி­மன்­றத்தை அமைப்­பதா இல்­லையா என்­பது குறித்த இறுதி தீர்­மானம் அடுத்த வருடம் ஜன­வரி மாத இறு­தியில் தீர்­மா­னிப்போம்.

கேள்வி மேலும் எதிர்­வரும் 24 அல்­லது 25 ஆம் திகதி எமக்கு சார்­பான பிரே­ரணை ஜெனி­வாவில் கொண்­டு­வ­ரப்­படும். அதன்­போது எமக்கு அனைத்து உறுப்பு நாடு­களும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என எதிர்­பார்­க­கின்றோம்.

கேள்வி -18 மாதங்­களில் அர­சியல் தீர்வு காணப்­ப­டுமா?

பதில்- அது நீண்­ட­கால செயற்­பா­டாக அமையும். அர­சியல் தீர்வு காணும் செயற்­பாடு நீண்­ட­கா­ல­மா­னது. எனவே அது நீண்­ட­காலம் எடுக்கும் செயற்­பா­டாகும்.

கேள்வி- நம்­பிக்­கையை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்­பு­வீர்கள்?

பதில்- இதுதான் மிக முக­கி­ய­மான விட­ய­மாகும். தமிழ் முஸ்லிம் சிங்­கள மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது மிகவும் அவசியமாகும்.

கேள்வி -சர்வதேச நீதிபதிகளை வரைவழைப்பீர்களா?

பதில்- சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை இலங்கைக்கு வரவழைத்து உள்ளக விசாரணையை மேற்கொள்வதா அல்லது உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பிலும் ஜனவரி மாதமே தீர்மானம் எடுக்கப்படும். எமது விசாரணை செயற்பாட்டை நாங்கள் எமக்கேற்ற வகையில் முன்னெடுப்போம்.

கேள்வி -இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

பதில்- இராணுவ வீரர்கள் யாராவது குற்றமிழைத்துள்ளமை நிரூபிக்கப்படுமானால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு உதாரணங்கள் உள்ளன. இதன்மூலம் முழு இராணுவத்தினதும் புகழை பாதுகாக்க முடியும்.

கேள்வி- சர்வதேசத்திடம் எவ்வாறான ஆதரவை பெறுவீர்கள்?

பதில்- தடவியல் மற்றும் தொழில்நுட்ப விடயங்களில் உதவிகளை பெறுவோம். எனினும் அதனையும் ஜனவரி மாதமே தீர்மானிப்போம்.

கேள்வி - சரி கலப்பு நீதிமன்றம் தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டை கூறலாமே?

பதில்- ஐ.நா. வின் பரிந்துரைக்கும் எமது பொறிமுறைககும் பாரிய வித்தியாசங்கள் இல்லை. சில விடயங்கள் குறித்து ஜனவரி மாத இறுதியில் தீர்மானம் எடுப்போம். எமது விடயத்தை நாங்கள் முன்னெடுப்போம்.