Breaking News

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு இலங்கை மீன்­களை இறக்­கு­ம­தி­செய்­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை நீக்­கு­வ­தற்கு அதன் விசேட குழு அடுத்த மாதம் 5 ஆம் திகதி விஜயம் செய்­ய­வுள்­ள­தாக மீன்­பிடி மற்றும் நீரியல் வளத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் திலிப் வெத­ஆ­ராச்சி தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியின் போதே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தடை விதிக்­கப்­பட்­டது. தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் அத்­த­டையை நீக்­கு­வ­தற்­கான சாத­க­மான நிலை­மைக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை கொண்டுவந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் இலங்கை மீனவர் பட­கு­களை கண்­கா­ணிப்­ப­தற்கு புதிய தொழில்­நுட்­பத்தை இலங்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.மீன்­பிடி மற்றும் நீரியல் வளத்­துறை இரா­ஜாங்க அமைச்­ச­ராக திலிப் வெத ஆராச்சி நேற்­றைய தினம் கட­மை­களை பொறுப்­பேற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், ஜன­வரி 8 ஆம் திகதி நாட்டில் நிலை­கொண்­டி­ருந்த ராஜ­பக் ஷ குடும்ப ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது நாட்டின் நல்­லாட்சி, ஜன­நா­யகம் சீர்­கு­லைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதே­போன்று ஜரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு இலங்கை மீன்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு தடையும் விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தற்­போது நாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சியின் போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன்­பிடி இறக்­கு­மதித் தடையை மீளப்­பெ­று­வ­தற்கு சர்­வ­தேச ரீதி­யாக பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு தற்­போது சாத­க­மான நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர முயற்­சி­யினால் இவ்­வா­றான நிலைமை தோன்­றி­யுள்­ளது.ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் இலங்கை மீன் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை நீக்­கு­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விசேட குழு அடுத்த மாதம் 5 ஆம் திகதி இலங்கை வருகை தர­வுள்­ளது.இதன்­பின்னர் இலங்­கையின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் ஐரோப்­பி­ய ஒன்றியத்தின் தடை நீக்­கப்­படும்.அத்­தோடு இலங்கை மீனவர் பட­கு­களை கண்­கா­ணிப்­ப­தற்கு புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சியின் போது மீனவர் களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை போன்று பாரிய சலுகை வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நான் எதிர் பார்த்துள்ளேன் என்றார்.