Breaking News

தேசிய அரசாங்கத்துடன் தமிழ் தலைமைகள் கைகோர்க்க வேண்டும் - சம்பிக்க கோரிக்கை

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள சர்­வ­தே­சத்தை நம்­பி­யி­ருக்காது, அமை­ய­வி­ருக்கும் தேசிய அர­சாங் கத்துடன் தமிழ் தலை­மை­களும் கைகோர்க்க வேண்டும். தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் இந்த ஆட்­சியில் நிறை­வேற்­றப்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

ஆட்­சி­மாற்­றத்தின் மூல­மாக புலி­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றலாம் என ஒரு­சிலர் காணும் கனவை ஒரு­போதும் நிறை­வேற்ற முடி­யாது எனவும் அவர் குறிப்பிட்டார். அமை­ய­வி­ருக்கும் தேசிய அர­சாங்­கத்தில் தேசிய பிரச்­சி­னைகள் எவ்­வாறு கையா­ளப்­படும் என ஊடகவிளலாவின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் இப்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் மாற்­ற­மா­னது ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வகையில் அமை­யப்­பெற்­றுள்­ளது. அதேபோல் இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்­தங்­களை குறைந்­துள்­ளது. எனினும் இன்னும் சில தினங்­களில் இலங்கை தொடர்­பி­லான விசா­ரணை அறிக்­கை­யினை ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேரவை வெளி­யி­ட­வுள்­ளது. இந்த நிலையில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையின் இலங்கை மீதான பிரே­ர­ணையை தோற்­க­டிக்க அனை­வரும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். கடந்த கால ஆட்சித் திட்­டத்தை கருத்தில் வைத்­துக்­கொண்டு இலங்­கையை பழி­வாங்­கி­விடக் கூடாது.

கடந்த காலங்­களில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை கவ­னத்தில் கொள்­ளாத கார­ணத்­தினால் தமிழ் மக்­களும், தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் அர­சாங்­கத்­துடன் பகைத்­துக்­கொண்டு செயற்­பட்­டனர். அதேபோல் சர்­வ­தேச அளவில் இலங்­கைக்கு எதி­ரான பல செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டனர். ஆனால் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் நாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாற்றம் எந்­த­வொரு தனி இனத்தை சார்ந்­த­தா­கவோ அல்­லது யாரையும் காப்­பாற்­று­வ­தா­கவோ அமை­யாது முழு நாட்­டையும் பாது­காக்கும் வகையில் அமைந்­தது. இந்த மாற்­றத்தில் பிர­தா­ன­மாக தமிழ் தலை­மை­களும் மக்­களும் பங்கு கொண்­டனர்.

அதேபோல் இப்­போதும் உரு­வா­கி­யி­ருக்கும் அர­சாங்­க­மா­னது குடும்ப நலனை கவ­னத்தில் கொண்டோ அல்­லது யாரையும் பழி­வாங்க வேண்டும் என்றோ அமை­ய­வில்லை. இந்த அர­சாங்கம் தனித்த ஒரு இன மக்­களை மட்டும் பிர­தி­நி­தித்­துவப் படுத்­த­வு­மில்லை. நடை­பெற்று முடி­வ­டைந்­துள்ள பொதுத் தேர்­தலில் சிங்­கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் என அனை­வரும் எமக்கு வாக்­க­ளித்­துள்­ளனர். அனைத்து பகு­தி­களில் வாழும் மக்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கத்தை ஆத­ரித்­துள்­ளனர். ஆகவே இந்த மாற்றம் நாட்டின் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­து­வதில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது.

ஆகவே நாட்டை ஒன்­றி­ணைந்த பாதையில் கொண்டு செல்­வ­தாயின், நாட்டின் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் இப்­போது அமை­ய­வி­ருக்கும் தேசிய அர­சாங்­கத்தில் தமிழ் பிர­தி­நி­தி­களும் பங்கு கொள்ள வேண்டும். தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புகள், அவர்­களின் நலன்­களை இந்த அர­சாங்­கத்தில் இணைந்து பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். மாறாக சர்­வ­தே­சத்தை தொடர்ந்தும் நம்­பி­யி­ருப்­ப­தனால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கப்­போ­வ­தில்லை. ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்­ற­மா­னது சர்­வ­தே­சத்தை முழு­மை­யாக திருப்திப் படுத்­தி­யுள்­ளது. இலங்கை மீது புதிய நம்­பிக்கை உரு­வாக்­கி­யுள்­ளது. இலங்­கையின் மனித உரி­மைகள் பலப்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்கை சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் மனித உரி­மைகள் பேர­வைக்கும் ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இதுவே எமக்குக் கிடைத்­தி­ருக்கும் மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

யுத்த குற்­றச்­சாட்­டு­களை மாத்­திரம் முன்­வைத்­துக்­கொண்டு இலங்கையை தண்­டிக்க பலர் முயற்­சி­த்தனர். அதேபோல் நாடு கடந்த விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­புகள் மற்றும் புலம்­பெயர் புலிகள் என பலர் இலங்­கையை பிள­வு­ப­டுத்தும் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­தனர். சர்­வ­தேச நாடுகள் இப்­போது தமது முடி­வு­களை மாற்­றிக்­கொண்ட போதிலும் புலம்பெயர் புலிகள் அமைப்புகள் இன்றும் தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகின்றன.

ஆகவே அவற்றில் இருந்தும் நாட்டை காப்பாற்ற வேண்டும். ஆட்சி மாற்றதின் மூலமாக மீண்டும் நாட்டில் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என எவரேனும் நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது. எனவே நல்லாட்சியில் தமிழ்,சிங்கள பிரதிநிதித்துவம் அமையவேண்டும் என்றார்.