Breaking News

யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை - பிரதமர் ரணில்

ஐ.நா.அறிக்­கை­யினை பூதா­க­ர­மாக காண்­பித்து அதனால் இன­வா­தத்தை கட்­ட­விழ்த் து­விட எத்­த­னிக்கும் தரப்­பினர் அண்­மை யில் வெளி­யி­டப்­பட்ட யுத்தக் குற்றம் தொடர்­பி­லான அறிக்­கையில் ஒரு­போதும் இலங்­கையில் யுத்­த­க்குற்றம் இடம் பெற் ­றது என்றோ சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்றோ குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. 

மாறாக யுத்தக் குற்றம் இடம் பெற்­றதா என்­பது குறித்து உள்­நாட்டு பொறி­முறை அமைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே பணிப்­புரை விடுக்­கப்­பட்­டது என்­பதை கருத்­திற்­கொள்ள வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வு­றுத்தல் விடுத்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன யுத்தம் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து நாடு தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை வேண்டும் என்று குறிப்­பிட்­ட­போதும் இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப் போவ­தாக அறி­வித்த போதும் எதிர்த்­த­வர்­களே இன்றும் பொய் விஷ­மத்­த­ன­மான கருத்­துக்­களை சமூ­கத்தில் பரவச் செய்­கின்­றனர் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

என்­மீது யார் சேறு பூசு­கிறார் என்­பது தொடர்பில் எனக்கு கவலை இல்லை. ஆனால் நாட்டின் சுயா­தீன தன்­மையின் மீது கைவைக்க நான் எவ­ருக்கும் இட­ம­ளிக்­க­மாட்டேன். அத­னா­லேயே தேசிய அர­சாங்கம் அமைத்து உள்­நாட்டு பொறி­மு­றைக்கும் வழி செய்தோம் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்டார்.

கொழும்பில் ஜே.ஆர். ஜய­வர்த்­தன கேந்­திர நிலை­யத்தில் இடம் பெற்ற முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­த­னவின் 109 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாறும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேரவை கடந்த 14ஆம் திகதி இலங்­கையில் இடம் பெற்ற யுத்­தக்­குற்றம் தொடர்­பி­லான அறிக்­கையை வெளி­யிட்­டது. குறித்த அறிக்கை வெளி­யிடும் போது எந்த இடத்­திலும் இலங்­கையில் யுத்த குற்றம் இடம் பெற்­றது என்றும் சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்றும் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. மாறாக யுத்த குற்றம் இடம் பெற்­றுள்­ளதா என்­பது தொடர்பில் உள்­நாட்டு பொறி­மு­றையில் ஆராய்ந்து பாருங்கள் என்றே பரிந்­துரை செய்­தது.

ஆனால் இதனை விளங்கிக் கொள்­ளத சில தரப்­பினர் முன்னாள் தலை­வர்­களை தண்­டிக்­கப்­போ­கி­றார்கள் என்ற விதத்தில் பொய்­யான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர் அதே­வேளை அவர்­க­ளது குற்றம் நிரூ­ப­ன­மானால் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்­ளனர். இவர்கள் ஐ.நா. அறிக்­கையை புதா­க­ர­மாக காண்­பித்து இன­வா­தத்தை கட்­ட­விழ்த்து விட முன்­னெ­டுக்கும் முயற்­சியை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன 1984,1985 ஆம் ஆண்­டு­களில் யுத்தம் ஆரம்­பித்த காலப்­ப­கு­தியில் நாட்டில் சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்று கூறிய போதும் மேற்­கு­றித்த தரப்­பி­னரே அதற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர். அது மட்­டு­மன்றி குறித்த தரப்பு இந்­து-­லங்கா ஒப்­பந்தம் தொடர்பில்

பேச்­சு­வார்த்தை இடம் பெற்­ற­போதும் எதிர்த்­தது. ஆனால் இன்று அத­னா­லேயே எமது நாட்டை காப்­பாற்­றிக்­கொள்ள முடிந்­தது.

இவை அனைத்தும் எமக்கு சேறு பூசு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டுகள். என்­மீது எவர் சேறு­பு­சி­னாலும் அதற்­காக நாம் கவ­லை­ய­டை­யப்­போ­வ­தில்லை. நாட்டின் மீது சேறு புசப்­ப­டாமல் காப்­பதே எமது தேவை­யாகும். அதனால் தான் சர்­வ­தேச விசா­ர­ணையை தற்­போது உள்­நாட்டு பெறி­மு­றை­யாக்கும் முயற்­சியில் இறங்­கி­யுள்ளோம். அதற்­கா­கவே தேசிய அர­சாங்­கமும் அமைத்தோம்.

மறு­புறம் தேசிய அர­சாங்கம் குறித்து பல­வா­றான விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளது. தேசிய அர­சாங்கம் என்ற கலா­சா­ரத்தை உரு­வாக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­த­ன­வி­னா­லேயே முதலில் முன்­வைக்­க­பட்­டது. அதன் பிர­காரம் 1960 இல் இடம் பெற்ற தேர்­தலின் போது வெற்றி பெற்ற ஐக்­கிய தேசிய கட்சி 50 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. சுதந்­திர கட்சி 46 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. ஆனால் ஆட்சி அமைக்கும் பெரும்­பான்மை எவ­ருக்கும் இருக்­க­வில்லை அதன் போது அதிக ஆசனம் பெற்ற கட்சி என்ற வகையில் டட்ளி சேனா­நா­யக்க பிர­த­ம­ராக பத­வி­யேற்றார்.

ஆனால் அக்­கி­ரா­சனம் பற்­றிய பேச்சு எழுந்த போது அக்­கி­ரா­சனம் பெறும் அள­வுக்கு எந்த கட்­சிக்கும் பெறும்­பான்மை பலம் இருக்­க­வில்லை. அப்­போது டட்ளி பதவி வில­கு­வ­தாக கூறினார் அவரை வேண்டாம் என தடுத்த ஜே.ஆர் மற்­றய தரப்பை இணைத்து ஆடசி அமைக்க ஒரு­மாத கால அவ­காசம் கோரினார் ஆனால் அதன்­போது கட்­சியில் பெரும்­பா­ளானோர் ஜே.ஆர.ஜய­வர்­த­னவின் கருத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­மை­யினால் பாரா­ளு­மன்றம் களைக்­கப்­பட்டு தேர்தல் இடம் பெற்­ற­போது உடைந்த கட்­சிகள் ஒன்­றி­ணைந்து சுதந்­திர கட்­சி­யாக சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மையில் போட்­டி­யிட்­ட­துடன் வெற்­றியும் கண்­டது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்சி பின்­ன­டைவை சந்­தித்­தது.இந்­நி­லையில் 1967 ஆம் ஆண்ட மீண்டும் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது. இதன் போது இதன் போது வெற்றி கொண்ட ஐக்­கிய தேசிய கட்சி சி.பி.த சில்­வாவை பிர­த­ம­ராக செயற்­ப­டு­மாறு பணித்­தது 2 தட­வை­களும் அவர் மறுப்பு தெரி­வித்த அதே­வேளை டட்­ளியை ஆட்­சி­ய­மைக்க கோரினார் ஆனால் இந்த இரண்டு சந்­தர்ப்­பத்தின் போதும் ஜே.ஆர்.ஜய­வர்­தன தேசிய அர­சாங்கம் என்ற நோக்­கத்­தி­லேயே அவர் செயற்­பட்டார்.இதன் பின்னர் மீண்டும் ஒரு சந்­தர்ப்­பத்தில் சி.பி.த.சில்­வாவை சபா­நா­ய­க­ராக கட­மை­யாற்­றவும் ஜே.ஆர்.பணித்தார்.அதனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் இந்த வர­லாற்றை அறிந்­த­வர்கள் தேசிய அர­சாங்கம் அமைத்தமை தொடர்பில் குழப்பம் அடைய வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும் அன்று பல தடவை முயற்சித்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்.ஜயவர்தனவுக்கு கிடைக்காத வாய்ப்பு தேசிய அரசாங்கமாக செயற்பட எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிடைத்துள்ளது. அதனை கொண்டு நாட்டின் வலுவான அபிவிருத்தியை ஒருபடி முன்நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி அட்சி செய்யும் உத்தியை நன்கு அறிந்துள்ளது அதன்படி சிறந்த ஆட்சியொன்றினை முன்னெடுத்துச் செல்ல எம்மால் முடியும்.