Breaking News

கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தவின் ஆட்சியே காரணம்! ஜே.வி.பி. குற்றச்சாட்டு

கடந்த ராஜபக்ஷ ஆட்­சியில் நீதி­மன்­றத் தின் சுயா­தீனம் மீது அதி­கா­ரத்தை செலுத்­தி­யதன் கார­ண­மா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு இலங்­கைக்கு எதி­ராக கலப்பு நீதித்­துறை விசா­ர­ணைக்கு பரிந்­துரை செய்­துள்­ளது எனத் தெரி­வித்­துள்ள ஜே.வி.பி.யின் தலை­வரும், எம்.பி.யுமான அநுரகுமார திஸா­நா­யக்க தற்­போது நாட்டில் புதிய அர சாங்கம் ஆட்சிக்கு வந்­துள்­ளதால் எமது நாட்­டுக்கு சந்­தர்ப்­ப­மொன்றை வழங்க வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா.வின் யுத்தக் குற்­றச்­சாட்டு விசா­ரணைக் குழு அறிக்­கையில் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணைக்கு பரிந்­துரை செய்­துள்­ளமை தொடர்பில் தமது நிலைப்­பாட்டை தெரி­விக்­கை­யி­லேயே அநுரகுமார திஸா­நா­யக்க எம்.பி. இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இலங்கை தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்கு 'கலப்பு' நீதி­மன்­றத்தை நிறு­வு­வ­தென்­பது நாட்டின் அர­சி­ய­ல­மைப்புக்கும் ஐ.நா.வுடன் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள உடன்­ப­டிக்­கை­க­ளுக்கும் எதி­ரா­ன­தாகும்.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களும் நாட்டின் அர­சி­ய­ல­மை ப்பை பாது­காப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.எனவே, எந்­த­வொரு விதத்­திலும் அர­சி­ய­ல­மைப்பை மீறு­வ­தற்கு எவ­ராலும் முடி­யாது.இவ்­வா­றா­ன­தொரு நிலைமை எமது நாட்­டுக்கு ஏற்­ப­டு­வ­தற்கு கடந்­த­கால ராஜபக்ஷ ஆட்­சியே கார­ண­மாகும்.

அவ் ­ஆட்­சியில் நீதி­மன்­றத்தின் சுயா­தீனம் மீது அதி­காரம் செலுத்­தப்­பட்­ட­தோடு நீதி­மன்­றத்தை ஆட்­சி­யா­ளர்­களின் கைப்­பொம்­மை­யாக ஆட்­டு­வித்­ததன் கார­ண­மா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு யுத்­தக்­ குற்­றச்­சாட்டு விசா­ர­ணை­களை நடத்த கலப்பு நீதி­மன்ற யோச­னையை பரிந்­துரை செய்துள்ளது. தற்போது நாட்டில் புதிய ஆட்சி அதிகாரம் உருவாகியுள்ளது. எனவே எமது நாட்டுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டுமென்றும் அநுர குமார திஸாநா யக்க எம்.பி.தெரிவித்துள்ளார்.