Breaking News

வெளியானது ஐ.நா அறிக்கை-கலப்பு பொறிமுறையாம்(காணொளி இணைப்பு)

கலப்பின உள்ளக விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம்செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பார்வையிட அறிக்கை இணைப்பு ஆங்கிலம் -

தமிழாக்கம் 

கலப்பின வகை நீதிமன்றமொன்றை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சர்வதேச ரீதியிலான நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் இந்த பொறிமுறைமை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


நீதிக்கு புறம்பான வகையிலான எறிகணைத் தாக்குதல், சட்டவிரோத படுகொலைகள், பலவந்த காணாமல் போதல்கள், பாரியளவிலான சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட பாரியளவிலான குற்றச் செயல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலில் புதிய மாற்றமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அறிக்கை வெளியிடப்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.