Breaking News

ஜனநாயகப் போராளிகளின் சாட்சியமளிக்கும் அறிவிப்பை வரவேற்கின்றோம்! கூட்டமைப்பு

சர்­வ­தேச நீதி­மன்றில் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு தயா­ரென தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­களைக் கொண்ட ஜன­நா­யகப் போரா­ளிகள் அமைப்பு அறி­வித்­துள்­ள­மை­யை வரவேற்கத்தக்கதானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது உண்­மை­களைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­படுமென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்­ளமை தொடர்­பிலும் ஜன­நா­யகப் போரா­ளிகள் அமைப்பு சர்­வ­தேச நீதி­மன்றில் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்குத் தயார் என அறி­வித்­தமை குறித்தும் கருத்து வெளியி­டும்­போதே கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ. சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற விட­யங்கள் தொடர்பில் உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட்டு பொறுப்புக் கூறப்­ப­ட­வேண்டும் என்­பதை நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­துள்ளோம். அந்த வகையில் உண்­மை­களைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­டு­மென பிர­தமர் தெரி­வித்­தி­ருப்­ப­தா­னது வர­வேற்­கத்­தக்­கது.

எனினும் அந்த உண்­மை­களைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வா­னது சுயா­தீ­ன­மா­ன­தாக அமை­ய­வேண்டும். அவ்­வாறு அமையும் சந்­தர்ப்­பத்­தி­லேயே உண்­மை­யான நிலை­மை­களைக் கண்­ட­றிந்து பக்கச் சார்­பற்ற வகையில் பொறுப்­புக்­கூ­றப்­படும். இத­னையே நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­துள்ளோம்.

இதே­வேளை தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போரா­ளி­களைக் கொண்ட ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பு சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அதில் சாட்­சி­ய­ம­ளிக்கத் தயா­ரென அறி­வித்­தி­ருப்­ப­தா­னது மிகவும் வர­வேற்­கப்­ப­ட­வேண்­டி­ய­தாகும்.

யுத்­தத்தில் ஈடு­பட்ட தரப்­பினர் தாமாக முன்­வந்து இவ்­வா­றான விசாரணையொன்றில் சாட்சியமளிப்பதென்பது அது தொடர்பிலான துல்லியமான உண்மைகளைக் கண்டறி வதற்கு ஏதுவானதாகவிருக்கும். இவ்வாறு யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சாட்சி யமளிப்பதன் ஊடாக உரிய நியாயத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றார்.