Breaking News

டிலான் பெரேராவிற்கு தேர்தலின் பின்னர் விஷப் போத்தல்கள் தேவைப்படும்! ஐதேக கூறுகிறது

எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எந்­த­வொரு ஊழல் மோச­டி­க­ளுக்கும் இட­மில்லை.

 

வெறு­மனே மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை பெறு­வ­தற்கு போலி­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­து­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் எம்மை அருந்­து­மாறு தெரி­வித்­தி­ருந்த விஷப்­போத்­தல்­களை கவ­ன­மாக தம்முடன் வைத்­து­கொள்­வதன் மூலம் எதிர்­வரும் பொது தேர்தலுக்கு பின்னர் தோல்­வியின் கார­ண­மாக அதனை பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு சந்­தர்ப்­பங்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்றன.

அத்தோடு குறிப்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசி­யப்­பட்­டி­யலில் இடம்பிடித்­துள்ள முன்னாள் அமைச்சர் டிலான் பெரே­ரா­வுக்கு விஷ­போத்­தல்கள் கட்­ட­ாயமாக தேவைப்­ப­டலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது.

கடந்த ஜன­வரி எட்டாம் திகதி நல்­லாட்­சிக்கு வித்­திட்டு குறு­கிய காலத்தில் மூவின மக்­க­ளுக்கும் பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்த எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­சா­ரங்­களை பாதாள கோஷ்­டி­களை ஈடு­ப­டுத்தி மேற்­கொள்­வ­தற்­கான எந்தவொரு தேவையும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு இல்லை எனவும் தெரி­வித்­தது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மை­ய­க­மான ஸ்ரீ கொத்­தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் களுத்­துறை மாவட்­டத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ளரும் முன்னாள் பிரதியமைச்­ச­ரு­மான அஜித் பி பெரேரா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் குறிப்­பி­டு­வது போல் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எந்த ஒரு ஊழல் மோச­டி­களும் இடம் பெற­வில்லை அவ்­வா­றான ஊழல் மோச­டி­களை எமது கட்சி எவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளிலும் அனு­ம­திக்­காது வெறு­மனே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தரப்­பி­னர்கள் மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை பெறு­வ­தற்கு போலி­யான பிர சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­வித்து விஷ­போத்­தல்­களை அருந்­து­மாறு தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினை சேர்ந்த உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் 17 ஆம் திக­திக்கு பின்னர் தோல்­வியை சந்­திக்க இருப்­ப­தனால் குறித்த விஷ­போத்­தல்­களை பாது­காத்து வைப்­பதன் மூலம் அதனை பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

குறிப்­பாக தேசி­யப்­பட்­டியல் மூலம் கட்­சியில் இடம் பிடித்­துள்ள முன்னாள் அமைச்சர் டிலான் பெரே­ரா­வுக்கு குறித்த விஷ­போத்தல் கட்­டா­ய­மாக தேவைப்­படும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. கடந்த ஜன­வரி மாதம் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வித்­திட்ட ஐக்­கிய தேசிய கட்சி அர­சா­னது 6 மாத காலத்தில் மூவின மக்­க­ளுக்­கான பல்­வேறு செயற்­றிட்­டங்ளை முன்­னெ­டுத்து மக்­க­ளுக்­கான பல்­வேறு சலுகை­களை வழங்கியதன் மூலம் மக்­களின் வாழ்க்கை சுமையை குறைத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் எமது கட்­சியின் பிர­சார பணி­களை எந்த ஒரு பாதாள உலக கோஷ்­டி­க­ளையும் பயன்­ப­டுத்தி மேற்­கொள்ள வேண்­டிய தேவை எமக்கு இல்லை. அவ்­வா­றான தேவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணிக்கே உள்­ளது. அந்தக் கட்­சியின் உறுப்­பி­னர்­களே அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுவர்.

குறு­கிய காலத்தில் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து மக்­களின் வாழ்க்கை சுமையை குறைத்த எமக்கே எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் இதை தவிர மக்­க­ளுக்­கான மாற்று வழிகள் இல்லை.

இன்று கொழும்பு மாவட்­டத்தை எடுத்துக் கொண்டால் எமது கட்­சியின் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் திறன்­க­ளிலும் அவர்­களின் அறி­வாற்றல், கல்வி தகைமை மக்­களின் ஆத­ரவு உள்­ளிட்ட விட­யங்­களில் ஒப்­பிடும் வகையில் கூட்­ட­மைப்பை சேர்ந்த எந்த உறுப்­பி­னரும் எமக்கு ஒப்­பா­ன­வர்கள் இல்லை. கடந்த ஜன­வரி 08 ஆம் திக­திக்கு பின்னர் மக்­க­ளுக்கு நாட்­டி­னது பொரு­ளா­தாரம் மற்றும் கட்­சி­யின் செயற்­பா­டுகள் தொடர்பில் தெளிவு தன்மை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது இதனை நாம் மிகவும் வர­வேற்­கின்றோம் அந்த வகையில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மக்கள் சிந்­தித்து செயற்­ப­டு­வார்கள் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தபால் மூல­மான வாக்­க­ளிப்­பா­னது எமக்கு பாரிய வெற்­றியை தேடித்­தந்­தது அந்­த­வ­கையில் இம்­மு­றையும் அதனை மக்கள் எமக்கு பெற்­று­த­ரு­வார்கள். கடந்த அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய வேட்­பா­ள­ரு­மா­கிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு மற்றும் கொடுப்­ப­ன­வு­க­ளான 2500 ரூபாவை பெற்று கொடுப்­ப­தற்கு 06 வரு­டங்கள் தேவை­யாக இருந்தது. மறு­புறம் நல்­லாட்சி அர­சான எமக்கு குறு­கிய 06 மாத காலப்­ப­கு­தியில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான சம்­பளம், கொடுப்­ப­ன­வு­க­ளாக 10000 ரூபாவை பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­தது என்றார்.