Breaking News

வடக்கில் புலிமுகம் தெற்கில் சிங்கமுகம் - சுசில் பிரேம்ஜயந்த குற்றச்சாட்டு

வடக்கில் பிரி­வி­னை­வாத பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தைப்போல் தெற்கில் ஒன்­றி­ணைந்த நாடு எனும் கட்­டுக்­க­தை­களை கூறி சிங்­கள மக்­களை ஏமாற்றும் வேலை­யினை ஐக்­கிய தேசியக் கட்சி மேற்­கொண்டு வரு­கின்­றது. 

வடக்கில் புலி முகத்­தையும் தெற்கில் சிங்கமுகத்­தையும் இவர்கள் காட்­டு­கின்­றனர் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் உச்­ச­கட்ட அதி­கா­ரப்­ப­கிர்வை ஒரு­போதும் மேற்­கொள்ள முடி­யாது. அப்­படி இவர்கள் கூறு­வது உண்­மை­யாயின் மாகா­ணங்­க­ளுக்­கான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கப்­போ­கின்­ற­னரா என்­பதை ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­விக்க வேண்டும் எனவும் அம்­முன்­னணி கேள்வி எழுப்­பி­யது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அக்­கட்­சியின் தலை­வர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் நட­வ­டிக்­கைகள் ஏனைய கட்­சி­களை விடவும் தாம­தித்த நிலையில் ஆரம்­பித்­தி­ருந்­தாலும் இப்­போது நாம் நல்ல நிலையில் எமது தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அனு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பித்த எமது தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கைகள் இப்­போது மக்­களின் ஆத­ர­வுடன் மிகவும் பல­மாக கொண்­டு­செல்­லப்­பட்டு வரு­கின்­றது.

ஆயினும் ஐக்­கிய தேசியக் கட்­சியும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் எம்­மீது பொய்­பி­ரச்­சா­ரங்­களை முன்­வைத்து மக்­களை எமக்­கெ­தி­ராக திருப்பும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. ஆனால் மக்கள் இனி­மேலும் இவர்­க­ளது பொய்­களை கண்டு ஏமா­றப்­போ­வ­தில்லை என்­பதை நாம் இவர்­க­ளுக்கு தெரி­விக்க விரும்­பு­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­று­தி­களும், அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னமும் முற்­றிலும் மக்­களை ஏமாற்றும் வேலைத்­திட்­ட­மாகும். மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி நாட்டை மீண்டும் இருண்ட யுகத்­துக்கு கொண்­டு­செல்­லவே ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் முயற்­சிக்­கின்­றனர். சர்­வ­தேச கொள்­கை­க­ளையும், சர்­வ­தேச பணத்­தையும் வைத்­துக்­கொண்டு மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின்­றனர்.

மேலும் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேலைத்­திட்­டங்­களும், தேர்தல் வாக்­கு­று­தி­களும் நாட்டில் பாரிய பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. நாட்டில் சமஷ்டி முறையில் தீர்வு எட்­டப்­ப­டா­விடின் ஐக்­கிய நாடுகள் சபையின் உத­வியை நாடப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

புலி­களைப் போசிக்கும் விஜ­ய­கலா

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தனது தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் புலி­களை போசிக்கும் வகையில் நடாத்­தி­வ­ரு­கின்றார். வடக்கில் புலி­களை பலப்­ப­டுத்தும் வகையில் தனது பிரச்­சார நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொண்டு வரு­கின்றார்.

அதேபோல் இன்று வடக்கின் பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் வடக்கின் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக வீழ்ச்­சி­கண்­டுள்­ள­தாக யாழ். நாக­வி­க­ரையின் விகா­ரா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஆகவே இன்று நாடு எந்த திசையில் பய­ணிக்­கின்­றது என்­பது நன்கு தெரி­கின்­றது. பிரி­வி­னைக்­கான அடித்­த­ளத்தை பிரிக்கும் வேலைத்­திட்­டத்­தினை ஐக்­கிய தேசியக் கட்சி மேற்­கொண்டு வரு­கின்­றது. வடக்கில் பிரி­வினை பிரச்­சா­ரங்­களை மேற்­கொண்டு தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­துடன், தெற்கில் இன­வாதக் கதை­ளையும், ஒன்­றி­ணைந்த நாடு எனும் கட்­டுக்­க­தை­க­ளையும் கூறி சிங்­கள மக்­களை ஏமாற்­று­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்சி வடக்கில் புலி முகத்­தையும் தெற்கில் சிங்க முகத்­தையும் காட்­டு­கின்­றது என்றார்.

அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஸ்ரீலங்கா சுதந்­தக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா தெரி­விக்­கையில்,

அர­சியல் தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கின்­றது. ஆனால் ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் உச்­ச­கட்ட அதி­காரப் பகிர்வு என இவர்கள் தெரி­விக்­கின்­றனர். அதேபோல் சமஷ்டி முறைமை வரும்­வ­ரையில் அர­சாங்­கத்தில் இணைந்­து­கொள்ளப் போவ­தில்லை என சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் உச்­ச­கட்ட அதி­கா­ரப்­ப­கிர்வை ஒரு­போதும் மேற்­கொள்ள முடி­யாது. அப்­படி கொடுப்­ப­தாயின் சமஷ்டி ஆட்­சியை உரு­வாக்க வேண்டும். அப்­படி இவர்கள் கூறு­வது உண்­மை­யாயின் மாகா­ணங்­க­ளுக்­கான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கப்­போ­கின்­ற­னரா என்­பதை ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­விக்க வேண்டும். நாட்டை பிரிக்கும் எந்­த­வொரு வேலைத்­திட்­டத்­தையும் இந்த நாட்டு மக்கள் விரும்­ப­மாட்­டார்கள்.

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தமது தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­களை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான வகையிலேயே முன்னெடுக்கின்றனர். அரச உடைமைகளை முழுமையாக பயன்படுத்தி தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு நாட்டில் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் மோசமானதாக மாறி வருகின்றது. 

மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றும் இவர்கள் நல்லாட்சி என்ற பொய்க்கதைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொடர்ந்தும் உண்மைகளை மறைத்து ஏமாற்றுக் கதைகளை கூறி மக்களை முட்டாளாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.