Breaking News

தேசிய அரசாங்கத்தில் தமிழ் கூட்டமைப்பு இணைய வேண்டும்! சம்பந்தனுக்கு சங்கரி கடிதம்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட வேண்­டு­மென்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.ஆனந்த சங்­கரி கோரிக்கை விடுத்­துள்ளார். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தி­லேயே அவர் இக் கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட வேண்­டு­மென தமிழர் விடு­தலைக் கூட்­டணி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் வேண்­டுகோள் விடுக்­கின்­றது.

இவ் வேண்­டுகோள் 60 ஆண்­டு­க­ளுக்கு மேல் அர­சி­யலில் பணி செய்து கொண்டு இந்த நாட்­டையும், நாட்டு மக்­க­ளையும் எவ­ரிலும் பார்க்க கூடு­த­லாக நேசிக்கும் ஒரு­வ­ரிடம் இருந்து வரு­கி­றது என்­பது உங்­க­ளுக்கு தெரி­யா­ததல்ல. குறிப்பிட்ட ஒரு­சி­லரை தவிர மற்றும் அனை­வரும் சொல்லொணாத் துன்­பங்­களை அனு­ப­வித்ததோடு மட்­டு­மல்­லாமல் பல உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் இழந்து எல்­லா­வற்­றிற்கும் மேலாக பல ஆண்­டுகள் மன வேத­னை­யுடன் வாழ்ந்­தார்கள். அப்­போது ஓர் அமை­தி­யான புரட்சி ஏற்­பட்டு எமது பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­கக்­கூ­டிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் உண்டு, ஆனால் அவற்றை எல்லாம் ஒரே நாளில் அல்­லது ஒரு சில நாட்­களில் தீர்த்து விட முடி­யாது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து இரு ஆண்­டுகள் நடத்­த­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் நிச்­ச­ய­மாக பல­வற்­றிற்கு தீர்வு காண­மு­டியும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் விரை­வாக ஓர் முடிவை எடுத்து தேசிய அர­சாங்­கத்தில் இணைய வேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கா­கவே அவர்கள் வாக்­கு­க­ளையும் அளித்­துள்­ளனர். பல வித­மான கொள்­கை­களை கொண்­டுள்ள 30 க்கும் மேற்­பட்ட அர­சியல் கட்­சி­களும் இணைந்த இவ்­வா­றான ஒரு சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையால் இந்த விட­யத்தை மிக கவ­ன­மாக கையாள வேண்­டிய கட­மைப்­பாடு உங்­க­ளுக்கு உண்டு.

ஆரம்­பத்தில் இருந்தே மாது­லு­வா­வே­சோ­பித்த தேரர், ஒமல்­பே­சோ­பித்த தேரர், அத்­து­ர­லிய ரத்­­ன­தேரர் போன்ற சமயப் பெரி­யார்­களும் மற்றும் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­ந­யக்க குமா­ர­துங்க, ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சேன போன்ற அர­சியல் பிர­மு­கர்­களும் தாம் இனப்­பி­ரச்­சினை தொடர்பில் ஏற்­பு­டைய தீர்வை பெற்றுத் தரு­வ­தாக மீண்டும் உத்­த­ர­வாதம் அளித்­துள்­ளனர். நீங்கள் அவர்­களை நம்­ப­வேண்டும் என்­பதையும், தேசிய அர­சாங்­கத்­திற்கு முழு ஒத்­து­ழைப்பை கொடுக்க வேண்டும் என்­பதையும் இச்­சந்­தர்ப்­பத்தில் எனது ஆலோசனையாகத் தெரிவிக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக தீர்வு காண முடி

யாதிருந்த இனப்பிரச்சினைக்கு இச் சந்தர்ப்பத்தில் தீர்வுகாணக் கூடிய வாய்ப்பை நழுவவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள் கின்றேன்.