Breaking News

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைக்கு வழங்குங்கள்

ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலை­மைக்கு தேசியப் பட்­டியல் ஆச­னத்தை வழங்­கு­மாறு வடமாகாண பொது அமைப்­புக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் கோரி­யுள்­ளன.

வட­மா­காண மீனவர் தொழி­லாளர் சங்கம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கம், நீர்வேலி வடக்கு, அச்சுவேலி விவசாய சம்மேளனங்கள், யாழ்.மாவட்­ட கடற்­றொ­ழி­லா­ளர்­களின் சமாசம், பருத்­தித்­துறை இளைஞர் கழகம், மன்னார் மாவட்­டத்தின் மீனவர் சங்­கங்­களின் சமாசம், உதை­பந்­தாட்ட லீக் , சமா­தான அமைப்பு, முல்­லைத்­தீவு மாவட்­டத்தைச் சேர்ந்த மாதர் கிராம அபி­வி­ருத்தி சங்­கங்­களின் சமாசம், வவு­னியா மாவட்­டத்தைச் சேர்ந்த பனை, தென்னை கூட்­டு­றவுச் சங்கம், அச்சுவேலி மயான அபிவிருத்திச் சபை, இந்து இளைஞர் மன்றம், சங்கானை மாதர் சங்கம், அறிவகம்,வடமராட்சி சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு மையம் மற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு சனசமூக நிலையங்கள் ஆகிய அமைப்­புக்­களே இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளன.

இவ்­வ­மைப்­புக்கள் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு அனுப்பி கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்­கு-­ கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­யீட்­டி­தற்கு எமது பாராட்­டு­தல்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றோம். எமது மக்கள் நிரந்­த­ர­மாக இம்­மண்ணில் தலை­நி­மிர்ந்து அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் சம­மாக கைகோர்த்து நடப்­ப­தற்­கான தமது விருப்­பத்தை வாக்­க­ளிப்பின் மூலம் நிரூ­பித்­துள்­ளனர். இதில் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் மற்றும் பொது அமைப்­பு­களின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என்­பதைத் தாங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

எதிர்­பா­ராத வித­மாக கூட்­ட­மைப்பின் ஸ்தாபகத் தலை­வர்­களில் ஒரு­வரும் அங்­கத்­துவக் கட்­சியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இத்­தேர்­தலில் தோல்­வியைச் சந்­தித்­துள்ளார். ஆனால் கூட்­ட­மைப்பின் வெற்­றியில் அவ­ரது பங்­க­ளிப்பு கணி­ச­மாக இருந்­ததைத் தாங்கள் மறுக்­க­மாட்­டீர்கள் என்று நம்­பு­கிறோம்.கூட்­ட­மைப்பின் ஜன­நா­ய­கத்தைக் காப்­ப­தற்கும் அவ­ரது குரல் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் ஒலிப்­ப­தற்கும் தாங்கள் உரிய நட­வ­டிக்­கையை எடுப்­பீர்கள் என்று நாங்கள் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம்.

பொது அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளான நாம் தேசியப் பட்­டியல் ஆச­னத்தில் ஒன்றை சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு அளித்து கூட்­ட­மைப்பின் ஒற்­று­மை­யையும் ஜன­நா­ய­கத்­தையும் காப்­பீர்கள் என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கிறோம். மிகவும் நெருக்­க­டி­யான காலம்­தொட்டு இன்­று­வரை அவர் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மைக்­கா­கவும் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வந்­துள்­ளதை கவ­னத்­தில்­கொண்டு அவ­ருக்கு அப்­ப­த­வியை வழங்க வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது நான்கு கட்­சி­களின் கூட்­டி­ணைவு என்­பதால் கிடைத்­தி­ருக்கும் தேசி­யப்­பட்­டியல் ஆச­னங்கள் இரண்டும் கூட்­ட­மைப்­புக்குச் சொந்­த­மா­னது என்­பதை கவ­னத்தில் கொண்டு ஒரு கட்­சியின் தலைவர் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பதால் தாங்­க­ளா­கவே முடி­வெ­டுத்து அவ­ருக்கு தேசியப் பட்­டி­யலின் மூலம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அந்­தஸ்தைக் கொடுப்­பீர்கள் என்று உங்­கள்­மீது மதிப்பும் மரி­யா­தையும் வைத்­தி­ருக்கும் நாங்கள் எதிர்­பார்த்­தி­ருந்தோம்.

 தாங்கள் அவ்­வாறு நடந்­து­கொள்­ளா­மையால் நாங்கள் இக்­க­டி­தத்தை எழுத வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளோம் என்­ப­தையும் தங்­க­ளது கவ­னத்­திற்குக் கொண்­டு­வர விரும்­பு­கின்றோம்.எனவே, தாங்கள் சற்றும் தாமதியாமல் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு ஆச னத்தை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க் கின்றோம் என்றுள்ளது.