Breaking News

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியிக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது 50 வயது மதிக்கத்தக்க ஒர் ஆணின் சடலம் எனவும், இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.