Breaking News

புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயன்றாராம்: முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். 119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்ட கட்டளையைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது வீட்டில் இருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரைபடங்கள், புகைப்படங்கள் என்பவற்றுடன் வங்கிக் கணக்குப் புத்தகங்ளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.