Breaking News

அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் தொடர்பில் தேர்தலின் பின்னர் இறுதி முடிவாம்!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. அதன்போது அரசியல் கைதிகளது பெற்றோர்கள், காணாமல் போனவர்களது பெற்றோர்களும் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தினர்.

அதன்போதே தலைவரால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், உறவுகளுடைய ஆதங்கங்களை நாங்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த விடயங்களை இனியும் நீடித்துச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

தேர்தலின் பின்னர் அமையும் பதிய அரசின் ஊடாக இந்த விடயங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.