Breaking News

இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியை கைது செய்ய கோரிக்கை

இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி பெண்கள் அமைப்பொன்று நீதிமன்றத்தின் முன்னர் அமைதிப் போராட்டம் ஒன்றைச் செய்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதி சரத் டி ஆப்ரூ தனது வீட்டுப் பணிப் பெண்ணைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதைடுத்து அவர் மீது காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வீட்டுப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

அதேபோல் வீட்டுப் பணிப் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அச்சங்கத்தினர் கோரினர். அரசு இது தொடர்பில் வேலைத் திட்டம் ஒன்றையும் தயாரிக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கத்தின் தலைவி பிபிசியிடம் தெரிவித்தார்.இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிபதி சரத் ஆப்ரூவின் கருத்துக்களை பெற எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.