Breaking News

மூன்றில் இரண்டு ஆத­ர­­வை பெற­வி­டாது நாங்­கள் தடுப்போம்

பாரா­ளு­மன்­றத்தில்,20ஆவது சட்­டத்­தி­ருத்தம் வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­பட்­டுள்ளதன் பிர­காரம் கொண்டு வரப்­பட்டால் மூன்றில் இரண்டு ஆத­ரவைப் பெற­வி­டாமல் நாங்கள் தடுப்போம். 

இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆத­ரவு கிடைக்க மாட்­டா­தென நாங்கள் திட்­ட­வட்­ட­மாகக் கூறு­கின்றோம் என்று ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­தார்.

உலகில் ஜன­நா­யகம் நிலவும் நாடு­களில் இவ்­வாறு மோச­மான முறையில் அர­சியல் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க முடி­யாது. தாங்­க­ளாகத் தயா­ரித்து விட்டு, அதனை பல­வந்­த­மாக திணிக்­கின்­றார்கள் என்றும் அவர் விசனம் தெரி­வித்தார்.

கண்டி நகரை அபி­வி­ருத்தி செய்யும் 2015– 2030 வரை­யான செயல்­திட்­டத்தின் அங்­கு­ரார்ப்­ப­ணத்­தையும், செய­ல­மர்­வையும் கண்டி குயீன்ஸ் ஹோட்­டலில் நேற்று வெ ள்ளிக்­கி­ழமை முற்­பகல் ஆரம்­பித்த வைத்து உரை­யாற்­றிய பின்னர், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் குறித்து அவர்­க­ளது கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் ஹக்கீம் பதி­ல­ளித்தார்.

இதன்­போது அவர் மேலும் கருத்து தெரி­விக்­கை­யில்

19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வர முன்பு எங்­க­ளோடு மேற்­கொண்ட சுமூ­க­மான கருத்துப் பரி­மாற்­றங்­களும், நல்­லெண்­ணத்­து­ட­னான அணு­கு­மு­றையும் 20ஆவது திருத்­தத்தைப் பொறுத்­த­வரை கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்­பது உண்­மை­யி­லேயே எங்­க­ளுக்கு கவ­லை­ய­ளிக்­கி­றது.

இது தொடர்பில் நேற்று (வியா­ழக்­கி­ழமை) இரவு 20இற்கும் மேற்­பட்ட அர­சியல் கட்­சிகள் கொழும்பில் கூடி மீண்டும் நீண்ட நேர­மாக ஆராய்ந்தோம். அதில் எங்­க­ளது கட்­சி­யுடன், மக்கள் விடு­தலை முன்­னணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் மலை­யக மக்­களை மையப்­ப­டுத்­திய கட்­சிகள்,ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­யன உட்­பட பல கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்டு கார­சா­ர­மாக கருத்­துக்­களைத் தெரி­வித்­தனர். ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த சிறு­பான்­மை­யின பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டனர்.

பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி விட்டு, ஜனா­தி­ப­திக்கும் மிக அழுத்­த­மாகத் தெரி­வித்த பின்னர் 20ஆவது திருத்தம் வர்த்­த­மா­னியில் அவ­சர அவ­ச­ர­மாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தை­மீ­ளப்­பெற வேண்­டு­மென பெறு­மாறு நாங்கள் வற்­பு­றுத்த இருக்­கிறோம். சிறிய கட்­சி­களும், சிறு­பான்மைக் கட்­சி­களும் சேர்ந்து இந்த 20ஆவது திருத்­தத்தை எதிர்க்கத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். தமிழ் தேசிய கூட்­ட­மைப்­போடும் ஏனைய சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளோடும் நாங்கள் கருத்து ஒற்­று­மைக்கு வந்­தி­ருக்­கின்றோம்.

நாடு முழு­வ­திலும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடாத்­து­வ­தற்கும் நாங்கள் தயா­ராகி வரு­கின்றோம். இது சம்­பந்­த­மாக மக்­களைத் தௌிவு படுத்தும் கூட்­டங்­க­ளையும் நாங்கள் எல்லாக் கட்­சி­களும் சேர்ந்து நடாத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம்.

எங்­க­ளது யோச­னை­க­ளையும் உள்­வாங்­கிய பின்னர் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­தி­ருக்­கலாம். பின்னர் பார்க்­க­லா­மென்­பதில் எங்­க­ளுக்கு அறவே நம்­பிக்­கை­யில்லை. 19ஆவது திருத்­தமும் அவ்­வா­றுதான். பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது எங்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்த 19ஆவது திருத்­த­மல்ல. முன்னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டவை பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் பொழுது பெரிதும் மாறி­வி­டு­கி­றது. வர்த்­த­மானி அறி­வித்தல் வாபஸ் பெறப்­பட்டு மீண்டும் திருத்­தங்­க­ளுடன் பிர­சு­ரிக்­கப்­பட வேண்டும் என்று நாங்கள் வலி­யு­றுத்­து­கிறோம். எல்லாம் தலை­கீ­ழாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

உலகில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இவ்வாறு மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. தாங்களாகத் தயாரித்து விட்டு எங்கள் மீதும், மக்கள் மீதும் அதனை பலவந்தமாக திணிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இந்நச் சட்டத்திருத்தம் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெறவிடாமல் நாங்கள் தடுப்போம். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்க மாட்டாதென நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றோம் என்றார்.