Breaking News

இனியும் முகாம் வாழ்க்கையை தொடர முடியாது! கண்ணீருடன் வலி.வடக்கு மக்கள்

25 ஆண்­டுகள் நிறை­வ­டைந்து முகாம் வாழ்க்­கை­யையே தொட­ர­வேண்­டிய அவ­-லத்­திற்குள் தள்­ளப்­பட்­டுள்ளோம். தொடர்ந்தும் எம்மால் இந்த நிலையில் நீடிக்க முடி­யாது என கண்­ணீ­ருடன் தெரி­விக்கும் வலி. வடக்­கி­லி­ருந்து இடம்­பெயர்ந்து வாழும் மக்கள் எவ்­வா­றா­வது தமது பிர­தே­சங்­க­ளுக்குள் மீண்டும் செல்­வ­தையே இலக்­காக கொண்­டி­ருக்­கின்றோம். எனவும் குறிப்­பிட்­டனர்.

1990ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக வலி. வடக்­கி­லி­ருந்து நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் மக்கள் இடம்­பெ­யர்ந்து சென்­றி­ருந்­தனர். அதன் பின்னர் இரா­ணுவம் அப்­பி­ர­தே­சத்தில் உயர் பாது­காப்பு வல­ய­மாக உரு­வாக்கி தொடர்ச்­சி­யாக நிலை­கொண்டு இருக்­கின்­றது.

தற்­போ­து­வரை இவர்­க­ளது மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் எந்­த­வி­த­மான உறு­திப்­பா­டு­களும் வழங்­கப்­ப­டா­த­நி­லையில் நலன்­புரி முகாம்­களில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். நேற்­றுடன் தமது சொந்த நிலத்தை விட்டு இடம்­பெ­யர்ந்து 25 ஆண்­டுகள் நிறை­வுக்கு வந்­த­நி­லையில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்,

நாம் எமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறும் போது எந்­த­வி­த­மான உட­மை­க­ளையும் கையில் எடுத்­து­சென்­றி­ருக்­க­வில்லை. உடுத்த உடை­யுடன் உயிரை கையில் பிடித்­துக்­கொண்டு வெளியே­றி­யி­ருந்தோம். அதன் பின்னர் எத்­த­னையோ வித­மான இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வந்தோம். என்றோ ஒருநாள் எமது சொந்த நிலத்­திற்கு திரும்பி மீண்டும் எமது வாழ்வை தொட­ரலாம் என்ற நம்­பிக்கை இன்றும் உள்­ளது.

கடந்த காலத்தில் காணப்­பட்ட அர­சாங்­கங்கள் எமக்கு எத்­த­னையோ உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­ய­போதும் இன்­று­வ­ரையில் எமது மீள்­கு­டி­யேற்றம் என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இறு­தி­யாக புதிய அர­சாங்கம் தனது நூறுநாள் வேலைத்­திட்­டத்தில் எம்மை மீள்­கு­டி­யேற்­று­வ­தாக அறி­வித்­த­போதும் இன்­று­வரை அதற்­கான எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்வ நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாக அறி­ய­வில்லை.

எனவே, எம்மால் தொடர்ந்து போலி­யான வாக்­கு­று­தி­களை நம்­பிக்­கொண்டு நலன்­புரி முகாம்­களில் அவலம் நிறைந்த வாழ்க்­கையை வாழ­மு­டி­யாது. எமக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும் எமது நிலங்கள் எம்­மிடம் ஒப்­ப­டைக்­க­ப்பட வேண்டும். இல்­லை-யேல் எவ்­வா­றா­வது நாம் எங்­க­ளு­டைய மண்­ணுக்கு செல்வோம் இதுவே எமது இலக்கு என்­றார்கள்

வலி வடக்கு பிர­தே­சத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் 38 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாகவும் அண்மையில் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட 620 ஏக்கர் நிலப்பரப்பில் 800 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக பதிவு-செய்துள்ளதாகவும் வலி வடக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்-கின்றன.