Breaking News

கூட்டமைப்பு சார்பில் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட பலர் விண்­ணப்­பித்­துள்­ளனர் - அரி­ய­நேத்­திரன் எம்.பி.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு பலர் விண்­ணப்­பித்­துள்­ளனர் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்­கான வேட்­பாளர் தெரிவு பற்றி கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு பலர் விண்­ணப்­பித்­துள்­ளனர். கட்­சி­ செ­ய­லா­ள­ருக்கு மட்­டு­மன்றி எமக்கும் விண்­ணப்­பங்கள் கிடைத்­துள்­ளன. எனினும் தெரிவு இன்னும் நடை­பெ­ற­வில்லை. அதனை தெரிவுக் குழுவே தீர்­மா­னிக்கும். இக்­கு­ழுவில் நாங்கள் இடம் பெற மாட்டோம். தேர்­தலில் போட்­டி­யி­ட­வி­ருப்­ப­வர்கள் இடம் பெற முடி­யாது. 

தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்கள் தொடர்ந்தும் போட்­டி­யி­டு­வதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இக்­கட்­டான காலப்­ப­கு­தி­க­ளான 2004,2010 தேர்­தல்­களில் நாம் போட்­டி­யிட்டு கட்­சியை இந்த நிலைக்­கு­கொண்டு வந்தோம். அப்­போது போட்­டி­யிட யாரும் முன்­வ­ர­வில்லை. நாம் பல இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்தோம். 2012 ஆம் ஆண்டில் நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தலின் போது வேட்பு மனுவில் கையொப்­பம இட்­ட­வர்கள் அச்சம் கார­ண­மாக பின்­வாங்­கிய வர­லாறும் உள்­ளது. 

தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்ந்து போட்­டி­யிட முடி­யுமா? முடி­யாதா? என்ற நிலைப்­பாடு மட்­டக்­க­ளப்­புக்கு மட்டும் பொருந்த மாட்­டாது. அப்­ப­டி­யானால் முழு வடக்கு, கிழக்­கையும் உட்­ப­டுத்­த­வேண்டும். எவ்­வா­றா­யினும் போட்­டி­யிட முன்­வ­ரு­வது ஜன­நா­யக உரிமை, கட்­சியே முடிவு எடுக்கும்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எட்­டுப்­பேர்தான் போட்­டி­யிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் நான்கு கட்­சிகள் அங்கம் வகிக்­கின்­றன. பெண்கள், இளை­ஞர்கள் ஆகியோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை கடந்த பொதுத் தேர்­தலில் கிறிஸ்­த­வர்­களின் சார்பில் ஒரு­வ­ருக்­கா­வது வேட்­பாளர் பட்­டி­யலில் இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் முன் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. வேட்­பாளர் தெரி­வின்­போது இந்தக் கருத்­துக்கள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

எட்­டுப்­பேரில் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மூவரும் நீங்­க­லாக ஐந்து அபேட்­சகர்கள் இடம் பெறுவர். இதில் ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எல் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டியுள்ளது. இக்கட்சிகள் பெண்கள், இளைஞர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடமளிக்காவிட்டால் அதனை ஈடுசெய்ய வேண்டிய பொறுப்பும் கூட்டமைப்புக்கு உள்ளது என்றார்.