Breaking News

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லா ­பி­ரே­ர­ணை­யி­னை பிற்­போட தீர்­மா­னம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை பிற்­போ­டு­வ­தற்கு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றத்தை கலைப்­பது தொடர்­பிலும் கட்சி தலைவர்கள் மத்­தி­யில் ஒரு­மித்த தீர்­மானம் எடுக்­கப்­ப­டாத நிலை­யில் கூட்டம் முடி­வ­டைந்­துள்­ள­து.

நாட்டின் அடுத்­த­கட்ட அர­சியல் நகர்­வுகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ­ஷ தலை­ மையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்டம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்ட நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை பிற்­போ­டு­வ­தற்­கான தீர்­மானம் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தாக எதிர்க்­கட்சி தரப்­பினர் தெரி­வித்­து­வந்த நிலையில் சபா­நா­யகர் தலை­மை­யி­லான நேற்­றைய கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் அதனை பிற்­போடும் தீர்­மானம் ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­வுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரு­வ­தாக கூறப்­பட்ட நம்­பிக்கை இல்லா பிரே­ரணை அடுத்த மாதம் 6ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

அதேபோல் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தொடர்பில் கட்­சி­க­ளுக்­கி­டையில் ஒரு­மித்த தீர்­மானம் எடுக்­க­மு­டி­யா­துள்ள நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் உட­ன­டி­யாக தேர்­த­லுக்கு செல்­வதை ஆத­ரித்­துள்ள போதிலும் ஒரு­சில இட­து­சாரிக் கட்­சி­களும் ஏனைய கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தொடர்­பில் ஒரு­மித்த தீர்­மானம் எடுக்­க­வில்லை என கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் தெரி­வித்­தனர்.

மேலும் 20 ஆவது அர­சி­ய­ல­மைப்­பு திருத்த சட்­ட­மூ­லம் இன்று அல்­லது நாளை வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் அதன்­பின்னர் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் அதை விவா­தத்தில் எடுப்­ப­தற்­கான கால அவ­காசம் அதிகமாக தேவைபடுகின்றமையினாலும் இப்போதைக்கு பாராளுமன்றத்தை கலைக்காது தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்து 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.