Breaking News

20 குறித்து இன்று இறு­தித்­ தீர்­மா­னம்! கூடு­கின்­றது அமைச்­­ச­ர­வை

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக வர­வுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்­பான இறுதி தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட அமைச்­ச­ரவை கூட்டம் இன்று வெள்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெறும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இந்த விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னைகள் குறித்து பரி­சீ­லிக்­கப்­படும். தேர்தல் முறை மாற்ற யோச­னையை பிர­தமர் முன்­வைத்­தாலும் அமைச்­ச­ர­வையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஒரு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்க்­கட்சி கொண்­டு­வ­ர­வில்லை மாறாக வேறு சில எம்.பி. க்களே கொண்டு வந்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க ஏன் அவ­ச­ரப்­ப­ட­வேண்டும்? எப்­போது கலைக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி தீர்­மா­னிப்பார் என்றும் அவர் கூறினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்­பான இறுதி தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட அமைச்­ச­ரவை கூட்டம் ஒன்று இன்று வௌ்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்­கப்­படும். அத்­துடன் இறுதி இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டால் வௌ்ளிக­கி­ழ­மையே வர்த்­த­மா­னியில் வெளி­யி­டவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னைகள் தொடர்­பா­கவும் பரி­சீ­லிக்­கப்­படும். ஆனால் கடந்த திங்­கட்­கி­ழமை அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்ற யோசனை வந்­தது. ஆனால் அப்­போது சிறு­பான்மை கட்­சிகள் தமது எதிர்ப்பை உரிய முறையில் பதிவு செய்­ய­வில்லை. அது ஏன் என்று தெரி­ய­வில்லை. எனினும் தற்­போது குரல் எழுப்­பு­கின்­றனர்.

தேர்தல் முறை மாற்ற யோச­னையை பிர­தமர் முன்­வைத்­தாலும் அமைச்­ச­ர­வையே இறுதி முடிவை எடுக்கும். அதா­வது தேர்தல் தொகு­தி­களை 125 ஆக வைத்­துள்­ள­மையே பல கட்­சிகள் எதிர்க்­கின்­றன. ஐக்­கிய தேசிய கட்சி திடீ­ரென பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 225 க்கு மேல்­அ­தி­க­ரிக்­கக்­கூ­டாது என்று கூறி­விட்­டது.

இந்­நி­லையில் புதிய தேர்தல் முறையின் பிர­காரம் 125 தேர்தல் தொகு­தி­களை உரு­வாக்­கு­வது பொருத்­த­மாக இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. எவ்­வா­றெ­னினும் இறுதி தேர்தல் முறை யோச­னையில் தேசிய பட்­டியல் தவிர்ந்த மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் எம்.பி. க்களின் எண்­ணிக்கை 200 ஆக இருக்கும். அதில் தொகுதி முறை­மையில் எத்­தனை உறுப்­பி­னர்கள் என்றும் மாவட்ட விகி­தா­சார முறையில் எத்­தனை உறுப்­பி­னர்கள் என்று தீர்­மா­னிக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி- 255 என்ற எம்.பி. க்களின் எண்­ணிக்­கையை ஏன் 225 ஆக குறைப்­ப­தற்கு ஏன் பிரே­ரிக்­கப்­பட்­டுள்­ளது? "

பதில்- ஐக்­கிய தேசிய கட்சி திடீ­ரென எம்.பி. க்களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கக்­கூ­டாது என்று கூறி­விட்­டதே?

கேள்வி - பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­முன்னர் தேர்தல் முறை மாற்றம் வருமா?

பதில் - நிச்­ச­ய­மாக தேர்தல் முறை மாற்­றத்தை நிறை­வேற்­றி­விட்டே பாரா­ளு­மன்­றத்தை கலைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கேள்வி- தேர்தல் முறை மாற்­றத்­துக்கு அமைச்­ச­ர­வையின் அனு­மதி கடந்த திங்­கட்­கி­ழமை கிடைத்­தமை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வெற்றி என்று பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் குறிப்­பிட்­டுள்­ளாரே?

பதில் -அன்று அவர் பதில் அமைச்­ச­ரா­கவே அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டார். அவ­ருக்கு நடை­முறை தெரி­யாமல் இருக்­கலாம்.

கேள்வி- நான்கு பிர­தி­ய­மைச்­சர்கள் பத­வி­யேற்­றுள்­ளனர். அப்­போது பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைக்­கப்­ப­டாதா?

பதில் -அமைச்­சர்கள் நிய­ம­னத்தை பார்க்­கும்­போது விரைவில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டாது என்றே தெரி­கின்­றது.

கேள்வி- அப்­ப­டி­யாயின் அடுத்­த­வ­ருடம் ஏப்ரல் வரை பாரா­ளு­மன்றம் நீடிக்­கப்­ப­டுமா?

பதில்- பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க ஏன் அவ­ச­ரப்­ப­ட­வேண்டும்? எப்­போது கலைக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி தீர்­மா­னிப்பார். விரைவில் கலைப்­ப­தாக ஜனா­தி­பதி கூற­வில்­லையே?

கேள்வி -அமைச்­சர்கள் கூடு­கின்­ற­னரே?

பதில் -தேசிய அர­சாங்கம் எனில் 55 அமைச்­சர்­களும் 45 பிர­தி­ய­மைச்­சர்­களும் இடம்­பெ­றலாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

கேள்வி- பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எப்­போது எடுக்­கப்­படும்?

பதில்- ஒரு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்க்­கட்சி கொண்­டு­வ­ர­வில்லை. மாறாக வேறு சில எம்.பி. க்களே கொண்டு வந்­துள்­ளனர்.

கேள்வி- நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைவி­டு­மாறு ஜனா­தி­பதி எம்.பி. க்களுக்கு கூறி­னாரா?

பதில்- அவ்­வாறு ஜனா­தி­பதி எதுவும் கூற­வில்லை. அவர் அப்­படி கூற­வு­மாட்டார்.

கேள்வி- மஹிந்­தவை இணைத்­துக்­கொண்டு ஜனா­தி­பதி சுதந்­திரக் கட்­சியை முன்­னெ­டுப்­பாரா?

பதில்- நி்ச்சய­மாக மஹிந்­தவை இணைத்து முன்­னெ­டுப்பார். அவர் யாரையும் இணைத்­துக்­கொள்வார்.

கேள்வி- ஆனால் மஹிந்­த­வுக்கு வேட்பு மனு கொடுக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்­தாரே?

பதில்- பிர­தமர் வேட்­பாளர் பதவி வழங்­கப்­ப­டாது என்றே கூறப்­பட்­டது. அவ­ருக்கு பிர­தமர் வேட்­பாளர் பதவி கொடுத்தால் இளை­ஞர்கள் புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்­ட­வர்­களின் வாக்­கு­களை நாங்கள் இழக்­கலாம்.

கேள்வி- சுதந்­திரக் கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்பு மனு விண்­ணப்­பங்கள் வரு­கின்­ற­னவா?

பதில்- விண்­ணப்பங்ள் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

கேள்வி -மஹிந்த ராஜ­பக்ஷ விண்­ணப்­பித்­துள்­ளாரா?

பதில் -அவர் விண்­ணப்­பிக்­க­வில்லை என்று நினை­க­கின்றேன். ஆனால் நாமல் ராஜ­பக்ஷ விண்­ணப்­பித்­துள்ளார். தனித்து போட்­டி­யி­டு­வ­தாக கூறிய பலர் விண்­ணப்­பித்­துள்­ளனர்.

கேள்வி- நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்பு மனு வழங்­கப்­ப­டுமா?

பதில் --அவ­ருக்கு வழங்­கப்­படும்.

கேள்வி -புதிய அர­சாங்­கத்தை நிறு­வி­விட்டு ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தாக ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். ஆனால் தற்­போ­தைய நிலை­மை­களை பார்க்­கம்­போது பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைக்­கப்­ப­டாதா?

பதில்- ஜனா­தி­பதி ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் செப்டெம்பரில் கலந்துகொள்வார். ஆனால் அரசாங்கத்தை அமைத்துவிட்டா அல்லது பழைய அரசாங்கத்தின் போதா ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பது என்பதனையும் ஜனாதிபதி தீர்மானிப்பார்.

கேள்வி -அவன்ட் கார்ட் விசாரணை மற்றும் ஜனவரி 9 சதி முயற்சி விசாரணை எந்த மட்டத்தில் உள்ளது? "

பதில்- அவன்ட் கார்ட் விசாரணை நடக்கின்றது. சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். சதி முயற்சி குறித்தும் விசாரிக்கப்படுகின்றது. சதி முயற்சி அல்லவா? விசாரிக்க காலம் தேவைப்படலாம்.

கேள்வி- துறைமுக நகர் திட்டம் ஆரம்பிக்கபடாதா?

பதில்- அது தொடர்பில் ஆராயும் குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும்.