Breaking News

மாற்­றங்­களை செய்ய முடி­யா­து: எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் கூறு­கி­றார்

சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் தேவைக்­க­மைய தேர்தல் திருத்த யோச­னையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடி­யாது. வர்த்­த­மானி அறி­வித்­தலில் முரண்­பா­டுகள் இருக்­கு­மாயின் இரண்டு வார காலத்­துக்குள் உயர் நீதி­மன்­றத்தை நாட­மு­டியும் என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

தேர்தல் திருத்­த ­யோ­ச­னை­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வது சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் தனிப்­பட்ட விட­ய­மாகும். அதில் நாம் தலை­யிட மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

20ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக வாபஸ் பெற­வேண்டும் இல்­லையேல் போராட்டம் நடத்­தப்­படும் என்று சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாட்டை வின­விய போதே எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் கடந்த ஒரு மாத காலத்­துக்கும் மேலாக கூடி ஆராய்ந்து இறு­தியில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் தலை­மை­யிலும் தனித்­த­னி­யாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதில் பாரா­ளு­மன்ற ஆசன முறை­மையில் பெரிய மாற்றம்

கொண்­டு­வ­ரு­வ­தில்லை என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இந்த தீர்­மா­னத்­ததை ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்ற ஆசன ஒதுக்­கீட்டை 255 ஆக உயர்த்­த­வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட போதிலும் தற்­போது பாரா­ளு­மன்ற ஆசன ஒதுக்­கீடு 237என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சி­களின் தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதேபோல் தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்கும் தேர்தல் முறைமை மாற்­ற­மா­னது சிறு­பான்மைக் கட்­சி­களின் ஆலோ­ச­னை­க­ளையும் கவ­னத்தில் கொண்டே எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முறை­மையில் சிறு­பான்மைக் கட்­சிகள் எந்த வகை­யிலும் பாதிக்­கப்­படப் போவ­தில்லை. அதி­க­ரி­கப்­பட்­டி­ருக்கும் ஆசன முறை­மை­யா­னது சிறு­பான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சேர்த்தே ஒதுக்­கப்­படும். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் இப்­போது இருக்கும் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் எந்த வகை­யிலும் குறைக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்லை. இது தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள் ஜனா­தி­ப­தி­யு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இதில் பல தீர்­மா­னங்­களும் எட்­டப்­பட்­டுள்­ளன. ஆகவே இது தொடர்பில் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை.

ஆனால் இந்த தேர்தல் முறைமை திருத்தம் தொடர்­பான தீர்­மா­னத்தில் இனி எந்த மாற்­றமும் ஏற்­படப் போவ­தில்லை. இந்த தீர்­மா­னத்தில் முரண்­பா­டுகள் இருக்­கு­மானால் இரண்டு வாரங்­க­ளுக்குள் உயர் நீதி­மன்­றத்தில் தமது எதிர்ப்­பு­களை வெளிப்­ப­டுத்த முடியும். அதற்­கான கால அவ­காசம் உள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் இந்த முறை­மையில் அதி­ருப்தி கொள்­ளு­மாயின் அவர்­களும் தமது எதிர்ப்­பு­களை வெளிப்­ப­டுத்த முடியும். அவ்­வாறு இல்­லாமல் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் தமது எதிர்ப்­பு­களை ஆர்ப்­பாட்­டங்கள் மூல­மா­கவோ அல்­லது பேர­ணிகள் மூல­மா­கவோ வெளிப்­ப­டுத்த வேண்டும் என நினைத்தால் அதற்கும் நாம் தடை­யாக இருக்கப் போவ­தில்லை.

அது அவர்­க­ளது தனிப்­பட்ட விட­ய­மாகும். அவர்­கள விரும்­பி­யதை செய்­ய­கூ­டிய உரிமை அவர்­க­ளுக்கு ை அவர்களுக்கு உள்ளது. ஆனால் இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் எமது யோசனையில் அதிருப்தி கொண்டிருந்தால் அல்லது எமது யோசனைகளில் தெளிவு இல்லை என்றால் எம்முடன் கலந்தாலோசிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.