Breaking News

சர்­வ­தேச புலிகள் அமைப்­புக்­க­ளுடன் கைகோர்த்து அர­சாங்கம் உடன்­ப­­டிக்­கை - நிமால் குற்றச்சாட்டு

லண்டன் பேச்­சு­வார்த்­தையின் பின்­ன­ணியில் புலி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கையே உள்­ளது. அர­சாங்­கத்தின் விளக்­கத்தை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

இடம்­பெ­யர்ந்த தமி­ழர்­களை மீளவும் குடி­ய­மர்த்­து­வதை சர்­வ­தேசம் தீர்­மா­னிக்க முடி­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­ டினார். புலம்­பெயர் தமி­ழர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்தி­ரிக்க முடி­யாது என்ற கருத்­தினை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்த நிலையில் அது தொடர்பில் எதிர்­கட்­சியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

லண்­டலில் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்தை புலி­களை மீண்டும் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஒரு கட்ட ஆயத்­த­மே­யாகும்.

யுத்­தத்தின் போது இலங்­கையில் இருந்து புலம்­பெ­யர்ந்­த­வர்கள் என்ற பெயரில் வெளி­நா­டு­களில் இருக்கும் விடு­த­லைப்­பு­லிகளின் ஆத­ர­வா­ளர்­களை சந்­தித்து நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் சந்­திப்­பா­கவே இது நடை­பெற்­றுள்­ளது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தமை மற்றும் புலி­களை கொன்­றமை போன்ற விட­யத்தில் சர்­வதே புலிகள் அமைப்­பினர் இலங்கை அர­சாங்­கத்தை பழி­வாங்கும் நோக்­கத்தில் உள்­ளனர். அதன் கார­ண­மா­கவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரை பழி­வாங்கும் வகையில் இன்றும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

அதேபோல் சர்­வ­தேச விசா­ர­ணையை தூண்டும் செயற்­பா­டுகள் இன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகவே இவை அனைத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே லண்­டனில் புலம்­பெயர் அமைப்­பு­களை சந்­தித்து அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது.

அதேபோல் இந்தப் பேச்­சு­வார்த்­தையில் என்ன விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது என்­பதை அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்­த­வில்லை. வெறு­மனே புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் பேசி­ய­தா­கவும் அவர்­களை நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் பேசி­ய­தாக தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் இது உண்மை இல்லை. ஐக்­கிய தேசியக் கட்சி அன்றும் புலி­களை ஆத­ரித்து உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டது. அதேபோல் இன்றும் சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­க­ளுடன் கைகோர்த்து சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை செய்­துள்­ளனர்.

இதனால் நாட்­டுக்கே பதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளது. எனவே ஜனா­தி­பதி இந்த விட­யங்­களை கவ­னத்தில் கொண்டு தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும். மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாத சூழல் உரு­வா­வதை ஜனா­தி­பதி அனு­ம­தித்­து­விடக் கூடாது.

மேலும் யுத்­தத்தில் இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­களை அவர்­க­ளது சொந்த இடங்­களில் குடி­ய­மர்த்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். கடந்த அர­சாங்­கமும் வடக்கில் அதி­க­ளவில் மீள்­கு­டி­யேற்­றங்­களை மேற்­கொண்­டது. அதேபோல் வடக்கில் இருந்து வெளி­யே­றிய சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் மீளவும் குடி­ய­மர்த்த வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். இதை நாம் வலி­யு­றுத்­துவோம்.

ஆனால் வடக்கில் மக்­களை குடி­ய­மர்த்­து­வது தொடர்பில் இந்த நாட்டு அர­சாங்கம் தான் தீர்­மானம் எடுக்க வேண்டும். இந்த விட­யத்தை சர்­வ­தேச அளவில் கொண்டு செல்­வ­தனால் எந்­தப்­ப­யனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அதேபோல் இலங்கை விட­யங்­களை தீர்­மா­னிக்க சர்­வ­தே­சத்­துக்கு எந்த உரி­மையும் இல்லை. ஆகவே இலங்­கையில் தமிழ் மக்­களை குடி­ய­மர்த்­து­வது தொடர்பில் அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தனால் எந்தப் பயனும் இல்லை.

இவர்களின் திட்டம் என்னவென்பது தெளிவாகத் தெரிகின்றது. இவர்கள் நாட்டை பிளவுபடுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி இடம் கொடுக்கக் கூடாது. வடக்கின் அரசியல் சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியை உடனடியாக ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.