Breaking News

பாரா­ளு­மன்றத்தை கலைத்த­தும் மைத்­திரி­யுடன் இருப்ப­வர்­கள் மஹிந்­த­வுடன் இணை­வார்­கள்!

நாட்டின் தேசிய பாது­காப்பு இன்று பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது. இதனை சுட்­டிக்­காட்டும் போது எம் மீது இன­வா­திகள் என்ற முத்­திரை குத்­தப்­ப­டு­வ­தாக தெரி­விக்கும் மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில, பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட பின்னர் மைத்­தி­ரி­யுடன் இருப்போர் மஹிந்­த­வுடன் இணை­வார்கள் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக உத­ய­கம்­மன்­பில மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டின் தேசிய பாது­காப்பு பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது. மீண்டும் புலிகள் தலை­தூக்­கு­கின்­றனர். ஆர்ப்­பாட்­டங்கள் என்ற பெயரில் வடக்கில் மீண்டும் புலிகள் இயக்கம் தலை­தூக்­கு­கின்­றது. புலப்­பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும் கை ஓங்­கு­கின்­றது. இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் யுத்­தத்தை முடித்து பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த தலை­வ­ரென்ற ரீதியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச இது தொடர்­பாக அக்­கறை செலுத்­து­கின்றார்.

மக்கள் மத்­தியில் பேசு­கின்றார். இதனை இன­வாதம் பேசு­வ­தாக முத்­திரை குத்தி அர­சியல் லாபம் பெற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அணி­யினர் முயற்­சிக்­கின்­றனர்.

புலி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் அதற்கும் இன­வாத சாயம் பூசி­னார்கள். இன்று ஜனா­தி­பதி என்ற அதி­காரம் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருப்­பதால் பலர் அவ­ரோடு இணைந்­துள்­ளனர். பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டதும் மைத்­தி­ரி­யுடன் இணைந்­தி­ருப்போர் அனை­வரும் மஹிந்­த­வுடன் வந்து இணை­வார்கள். அது மட்­டு­மல்ல மஹிந்த வெற்­றிலைச் சின்­னத்தில் பொது தேர்­தலில் போட்­டி­யிடும் நிலை உரு­வாகும்.

அவ்­வா­றான சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் வேறொரு அணியில் மஹிந்த போட்டியிடுவார். இன்று நாமும் மக்களும் கேட்பது மஹிந்தவே ஆகும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.