Breaking News

ஜன­வரி 8இல் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்த! பின் கதவால் பிர­த­ம­ராக முயற்சி - ரணில்

ஜன­வரி மாதம் 8ஆம் திக­தி­யுடன் நாட்டு மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தற்­போது பின் கதவால் புகுந்து பிர­த­ம­ரா­கு­வ­தற்கு துடித்துக் கொண்­டி­ருப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க தெரி­வித்தார்.

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லையை கண்­டித்தும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­மாறும் ஆர்ப்­பாட்டம் செய்­த­வர்­களை புலிகள் என்று கூறு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ காவத்தை இரட்டைக் கொலை வழக்கில் சந்­தேக நபர்கள் விடு­த­லை­யா­ன­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­வர்­க­ளையும் புலிகள் என்று அவர் கூறு­வாரா என்றும் பிர­தமர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

ஜனநாயக மக்கள் முன்­னணி கண்டி மாவட்ட பேராளர் மாநாடு முன்­னணி உப­த­லைவர் வேலு குமாரின் ஏற்­பாட்டில் தலைவர் மனோ கணேசன் தலை­மையில் கண்டி புஸ்­ப­தான மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்து கேள்­வி­யெ­ழுப்­பினார்.

பிர­தமர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் கடந்த ஜன­வரி மாதம் 8ஆம் திகதி தேர்­தலில் நிரா­க­ரித்­து­விட்ட போதும் அவர் இன்று பின் கதவால் பிர­த­ம­ராக வரு­வ­தற்கு முயற்­சிக்­கின்றார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் அவரை வீட்­டிற்கே விரட்­டி­விட்­டனர். என்­றாலும் அதனை அவர் மறந்து பின் கதவால் நுழை­யவே பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிடைத்த மக்கள் ஆணை­யினால் சிலர் பாரா­ளு­மன்­றத்­திற்குள் இன்னும் இருப்­பதை தெரிந்­துக்­கொண்டும் பிர­தமர் ஆகிய என்னை அகற்ற முயல்­வது ஒரு போதும் நடை­பெ­றப்­போ­வ­தில்லை.

ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியும் அதன் தலைவர் மனோ­க­ணே­சனும் இன்­றைய நல்­லாட்சி தோன்­று­வ­தற்கு பெரும் பங்­கா­ளி­க­ளாக செயற்­பட்­டுள்­ள­மையை மறந்து விட­மு­டி­யாது. 25 மாவட்­டங்­க­ளிலும் உயர்­கல்வி கற்­ப­தற்­கான அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட பாட­சா­லைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி அனைத்து மக்­களும் ஜன­நா­யக ரீதி­யாக இன­,மத மொழி பேதங்­கள் இன்றி சம உரி­மை­களை பெற்றுக் கொடுக்கும் கட்­சி­யாக விளங்கி வரு­கின்­றது. அதே போன்று சகல இன மக்­களும் சம­மான உரி­மை­க­ளோடு வாழ்­வ­தற்­கான வழி வகை­களை நாம் ஏற்­ப­டுத்தி வரு­கின்றோம்.

ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியும் அதன் தலைவர் மனோ கணே­சனும் மலை­யக தமிழ் மக்­க­ளுக்­காக மட்­டு­மல்ல தேசிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றனர். மக்கள் ஆணையை மீறி செயல்பட எவரும் முயலக்கூடாது என்பதை புரிந்துக் கொண்டும் உணர்ந்து கொண்டும் செயல்படுவார்களேயானால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாக அமையும் என்றார்.