Breaking News

ராஜி­த­வுக்கு பிர­தமர் ஆசை வந்­து­விட்­ட­து அத­னா­லேயே பொய் கூறு­கிறார்: வாசு விச­னம்

மஹிந்­தவை மீண்­டும் ஆட்­சிக்கு கொண்­டு­வர சகல வகை­யி­லான முயற்­சி­க­ளையும் எடுப்போம். மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் தீர்­மா­ன­மாகும் என்­று மஹிந்த ஆத­ரவுக் கூட்­டணி தெரி­வித்­தது.

பிர­தமர் பத­விக்கு ராஜித ஆசைப்­ப­டு­கின்றார். அத­னா­லேயே அமைச்­ச­ர­வை­யிலும் பொய் சொல்கின்றார் என்­றும் அந்தக் கூட்­டணி சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் மஹிந்­த­வுக்கு இடம் இல்லை என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணியின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே முன்னால் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் ஒன்­றி­ணைத்து கட்­சியை முன்­னெ­டுத்து செல்­வது அமைச்சர் ராஜித போன்ற ஒரு சில­ருக்கு பிடிக்­க­வில்லை. கட்­சியில் இருக்கும் முக்­கிய இரு­வ­ரான மஹிந்த மற்றும் ஜனா­தி­பதி மைதி­ரியை பிரித்து கட்­சியை பிள­வு­ப­டுத்­தவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர்.

அமைச்­ச­ர­வையின் செய்­தி­யாளர் சந்­திப்பில் ராஜித சேனா­ரத்ன பொய் கூறி­விட்டார். அவ­ரது கருத்­துக்கள் மக்­களை ஏமாற்றும் வகையில் அமைந்­துள்­ளது.

அடுத்த பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழு­வினர் ஆராய்ந்து வரு­கின்­றனர். அதேபோல் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இன்­னமும் கூட­வில்லை, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் சந்­திப்பும் இன்­னமும் நடை­பெ­ற­வில்லை.

ஆகவே இது­வ­ரையில் கட்­சிக்குள் ஏக­ம­ன­தான தீர்­மானம் என்­ன­வென்­பது தெரி­யாது அமைச்சர் ராஜித எவ்­வாறு மகிந்­த­வுக்கு கட்­சியில் இடம் இல்லை என்ற கருத்­தினை முன்­வைக்க முடியும்? இந்தக் கருத்து மக்­களை ஏமாற்றும் வகையில் அமைந்­துள்­ளது.

அதேபோல் அமைச்சர் ராஜித அடுத்த பிர­த­ம­ருக்­கான கனவு காண ஆரம்­பித்­து­விட்டார். அதி­கா­ரத்தை கைப்­பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்ற ஆசை அவ­ருக்கும் வந்­து­விட்­டது.

ஒரு புறம் எதிர்க்­கட்சி தலைவர் தனக்கு பிர­தமர் பதவி வேண்டும் என்ற நோக்­கத்தில் செயற்­ப­டு­கின்றார். மறு­பக்கம் ராஜித பிர­தமர் ஆக­வேண்டும் என்று கனவு காண்­கின்றார். இதனால் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இரு­வரும் கட்­சியில் ஒன்­றி­ணை­வதை இவர்கள் விருப்­பு­வ­தில்லை. இவர்கள் என்ன நினைத்­தாலும் மக்கள் அனை­வரும் மஹிந்­தவை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வ­ரு­வ­தையே விரும்­பு­கின்­றனர்.

ஆகவே மக்­களின் விருப்­பத்தை நிறை­வேற்றும் வகையில் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். மஹிந்த ஆட்­சியை மீண்டும் உரு­வாக்க எம்­மா­லான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சிக்குள் பலர் பிர­தமர் ஆவ­தற்கு கனவு கண்­டாலும் மஹிந்­தவே அடுத்த பிர­தமர் என்­பதை நாம் தீர்­மா­னித்து விட்டோம். ஆகவே அதற்­க­மைய எமது அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்றோம்.


முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண இது தொடர்பில் கூறு­கையில்,

இது வரையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் யார் பிர­தமர் வேட்­பாளர் என்ற இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. மஹிந்­தவை ஆத­ரிப்­பதா அல்­லது நிரா­க­ரிப்­பதா என்ற இறுதித் தீர்­மானம் கட்­சியின் மத்­திய குழு­வினால் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் அமைச்சர் ராஜி­தவின் கருத்­துக்கள் தொடர்பில் நாம் எமது கண்­ட­னத்தை தெரி­விக்­கின்றோம். யாரு­டைய அனு­ம­தியில் ராஜித இந்தக் கருத்­தினை முன்வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதியின் பெயரிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று ஜனாதிபதி எடுத்த தீர்மானமாகவே அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் தமது விளக்கத்தை ராஜித கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.