Breaking News

புதிய தேர்தல் முறைமை மாற்றம் தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் - யோகேஸ்வரன் எம்.பி

அர­சினால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள புதிய தேர்தல் முறைமையில் தொகு­திகள் குறைக்­கப்­ப­டு­மானால் அம்­பாறை மாவட்டம் பொத்­துவில் தேர்தல் தொகு­தியில் தமிழர் பிரதி நிதித்­துவம் இழக்கப்படும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். யோகேஸ்­வரன் தெரி­வித்தார்.

புதிய தேர்தல் முறையின் பாதிப்­புக்கள் சம்­பந்­த­மாக அவ­ரிடம் வின­விய போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், தற்­போது பொத்­துவில் தொகுதி இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யாக அமைந்­துள்­ளது.

இப் புதிய தேர்தல் முறைமையில் தொகு­திகள் குறைக்­கப்­பட்டு ஒரு தேர்தல் தொகு­தி­யாக கொண்­டு­வ­ரப்­படும் போது தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­துவம் இழந்து போகக் கூடிய சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­டலாம்.

இது சம்­பந்­த­மாக தீர்க்­க­மான முடி­வினை நாம் இப்­போது கூற முடி­யா­துள்­ளது.

அந்த வகையில் புதிய தேர்தல் முறைமை சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு கொண்டு வரும் போது அம்­பாறை மாவட்­டத்தில் தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­துவம் பாது­காக்கும் வகையில் எமது கட்சி நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­துடன் இது சம்பந்தமாக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.