Breaking News

அன்று வெள்ளை வேன் செய்­ததை இன்று வெள்ளை பேனா செய்­கின்­றது - டிலான் பெரேரா

பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டா­மையின் கார­ண­மா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டித்து ஜனா­தி­ப­தி­யானார். தற்­போது மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் பத­வியை கேட்டு கொடுக்­கா­விட்டால் என்ன நடக்கும் என்­ப­தனை மன­தில் ­கொண்டு அனை­வரும் செயற்­ப­ட­வேண் டும் என்று அமைச்சர் பத­வியை இரா­ஜி­ னாமா செய்த டிலான் பெரேரா தெரி­வித்தார்.

கடந்த அர­சாங்­கத்தில் வெள்ளை வேனில் கடத்­தல்கள் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­பட்டது. ஆனால் இந்த அர­சாங்­கத்தில் வெள்ளை பேனாவைக் கொண்டு அர­சியல் எதி­ரா­ளி­களை அடக்­கு­கின்­றனர். பொலிஸ் மா அதி­ப­ருக்கு மேல் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் போன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­ப­டு­கின்றார். எனவே இவ்­வா­றான அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மஹிந்த ராஜ­பக்ஷ சுதந்­திரக் கட்­சியின் ஊடாக போட்­டி­யிட்டு பிர­த­ம­ரா­க­வேண்டும் என்று தீர்­மா­னித்தால் அதற்கு கட்­சியில் எந்தத் தடையும் இல்லை. எவ்­வா­றா­வது எதிர்­வரும் தேர்­தலில் மஹிந்த - மைத்­திரி் அணி­களை ஒன்­றி­ணைத்து சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தை உரு­வாக்­கியே தீருவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

டிலான் பெரெரா உள்­ளிட்ட நால்வர் நேற்று தமது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். அது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் நோக்கில் நேற்று எதிர்க்­கட்சித் தலை­வர்ங அலு­வ­லக்தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே டிலான் பெரெரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

டிலான் பெரெரா மேலும் குறிப்­பி­டு­கையில்

நாங்கள் ஏன் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­கின்றோம் என்ற கார­ணங்­களை கூறி­விட்டோம். ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­விட்டோம். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக கூறி­ய­போது எவ்­வா­றான வேத­னையை அனு­ப­வித்­தாரோ அதே­போன்ற வேத­னையை நாங்­களும் அனு­ப­விக்­கின்றோம். எனவே எமது தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொள்வார் என்று நம்­பு­கின்றோம்.

நிதி புல­னாய்வு விசா­ரணைப் பிரிவை பொறுத்­த­வரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் போன்று செயற்­ப­டு­கின்றார். அன்று வௌ்ளைவானில் கடத்தல் இடம்­பெ­று­வ­தாக கூறப்­பட்­டது. ஆனால் இந்த அர­சாங்­கத்தில் வௌ்ளை பேனாவைக் கொண்டு அர­சியல் எதி­ரா­ளி­களை அடக்­கு­கின்­றனர். தொடர்ந்தும் இவற்றைக் பொறுத்­துக்­கொண்டு இருக்க முடி­யாது.

எமது நாட்டின் பிர­தமர் எமது நாட்டின் நீதித்­து­றையை விமர்­சித்து பொது­ந­ல­வா­யத்­துக்கு செல்­லப்­போ­வ­தாக கூறு­கின்றார். தான் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருப்­ப­தாக இன்னும் ரணில் நினைக்­கி­றாரோ தெரி­ய­வில்லை. இவ்­வாறு செய்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. பிர­தமர் வாய் மூலம் நீதி­மன்­றத்தை அச்­சு­றுத்­தும்­போது வடக்கில் நீதி­மன்­றத்தின் மீது கற்­களை கொண்டு தாக்­கப்­ப­டு­கின்­றது. நாம் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு இன்று எடுத்த தீர்­மானம் சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்கு உறு­து­ணை­யாக இருக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

வடக்கு மக்­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வாக்­கு­ரி­மையை பெற்­றுக்­கொ­டுத்தார். ஆனால் இன்று தெற்கு மக்­களின் வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­தல்­களை பிற்­போடும் தனது வழ­மை­யான செயற்­பாட்டை ஐக்­கிய தேசிய கட்சி ஆரம்­பித்­துள்­ளது. மஹிந்த ராஜ­பக்ஷ இந்த நாட்டின் தேசிய தலை­வ­ராக மக்­களின் மனதில் இடம்­பி­டித்­தவர். அவர் மஹிந்த ராஜ­பக்ஷ சுதந்­திரக் கட்­சியின் ஊடாக போட்­டி­யிட்டு பிர­த­ம­ரா­க­வேண்டும் என்று தீர்­மா­னித்தால் அதற்கு கட்­சியில் எந்தத் தடையும் இல்லை.

எவ்­வா­றா­வது எதிர்­வரும் தேர்­தலில் மஹிந்த - மைத்­திரி் அணி­களை ஒன்­றி­ணைத்து தேர்­தலில் கள­மி­றங்கி சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தை உரு­வாக்­கியே தீருவோம். பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டா­மையின் கார­ண­மா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டித்து ஜனா­தி­ப­தி­யானார். தற்­போது மஹிந்த ராஜ­பக்ஷ பிர­தமர் பத­வியை கேட்டு கொடுக்­கா­விட்டால் என்ன நடக்கும் என்­ப­தனை மன­தில்­கொண்டு அனை­வரும் செயற்­ப­ட­வேண்டும். மஹிந்த ராஜ­பக்ஷ இது­வரை இது தொடர்பில் தீர்­மானம் எடுக்­க­வில்லை என்று நம்­பு­கின்றோம்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாச சிறந்த தலைவர். அவர் என்னை சிறப்­பாக நடத்­தினார். தேசிய அர­சாங்­கத்தை எவ்­வாறு நடத்­து­வது என்­பது தொடர்பில் சஜித்­திடம் ரணில் விக்­ர­ம­சிங்க கற்­க­வேண்டும். மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வாக நடை­பெறும் கூட்­டங்­க­ளுக்கு கட்­சியின் மத்­திய குழு ஆத­ரவு வழங்­கினால் செல்வோம். அதா­வது ரணி­லுக்கு எதி­ராக எங்கும் கூட்டம் நடந்­தாலும் செல்வோம். அத்­துடன் நாங்­களும் கூட்­டங்­களை ஏற்­பாடு செய்வோம். ரணில் விக்­ர­ம­சிங்க தற்­போது விமல் வீர­வங்ச போன்று சத்­த­மாக உரை­யாற்­று­கின்றார். பிரபா கணே­சனை வாயை மூடிக்­கொண்டு இருக்­கு­மாறு கூறு­கின்றார் .

இதே­வேளை சுதந்­திரக் கட்­சிக்கு இன்று ஏற்­பட்­டுள்ள நிலைக்கு கட்­சியின் அனை­வரும் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட நாங்கள் அனை­வரும் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தேர்­த­லுக்கு செல்லும் தீர்­மா­னத்தை எடுத்­தமை தொடர்பில் நாங்கள் அனை­வரும் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்றார்.

அமைச்சர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன செய்­தி­யாளர் மாநாட்டில் குறிப்­பி­டு­கையில் இந்த அர­சாங்கம் தலதா மாளி­கையின் நில­மேவை விசாரிக்கின்றது. விஹாரைகளுக்கு நாங்கள் உதவி செய்யும்போது அவை தொடர்பில் கணக்கு விபரங்களை கோருவதில்லை.இதுதான் வழமையாகும். நிலமே விசாரிக்கப்பட்டமையினால் அஸ்கிரிய பீடாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி அசௌகரியத்துக்கு உள்ளாகினார். மேலும் வடக்கில் நீதிமன்ற உத்தரவை முதலமைச்சரே மீறுகின்ற நிலைமை காணப்படுகின்றது என்றார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் நேற்று அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சி.பி. ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.