Breaking News

அன்று கசப்பாக இருந்த ஜெனிவா இன்று இனிப்பாகிவிட்டது - அநுர

மஹிந்த ராஜபக்ஷ, பந்­துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ ஆகியோருக்கு அன்று கசப்­பாகக் காணப்பட்ட ஜெனீவா இன்று இனிப்­பாக மாறி விட்­டது என்­பது வேடிக்­கை­யா­க­வுள்­ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸா­ நா­யக்க எம்.பி. தெரிவித்தார்.

மேலும் திரு­டர்­களை பாது­காப்­பது சர்­வ­தேச பாரா­ளு­மன்ற சங்­கத்தின் கட­மை­யல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்­பாக ஜே.வி.பி. யின் தலை­வரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸா­நா­யக்க மேலும் தெரி­விக்­கையில், கடந்த காலங்­களில் ஜெனீவா என்ற வார்த்­தையை கூறு­கையில்,

மஹிந்த ராஜபக்ஷ, பந்­துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ கூட்­ட­ணிக்கு கசக்கும். ஜெனீவா என்­றாலே அது தடை செய்­யப்­பட்ட வார்த்­தை­யாக இருந்­தது. இன்று அது அவர்­க­ளுக்கு இனிப்­பாக மாறி­யுள்­ளது. சர்­வ­தேச பாரா­ளு­மன்ற சங்­க­மா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­படும் போதும் அவர்கள் தாக்­கப்­ப­டும்­போதும் அவர்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் எம்.பி.க்களின் உரி­மை­களை பாது­காக்கும் சங்­க­மாகும்.

அதுதான் அச் சங்­கத்தின் கட­மை­யாகும். அதைவிடுத்து ஊழல் மோச­டி­களில் ஈடு­படும் திருட்டு எம்.பி.க்களைப் பாது­காப் பது இச் சங்­கத்தின் கட­மை­யல்ல. எமது நாட்டில் முன்­னைய காலங்­களில் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு, போதை­வஸ்து தடுப்பு பிரி­வுகள் இயங்­க­வில்லை. ஆனால் காலப்­போக்கில் நாட்டில் பயங்­க­ர­வாத போதைப்­பொருள் பிரச்­சி­னைகள் தலை­தூக்கும் போது மேற்­கண்ட விசேட பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

அதே­போன்று தான் பாரிய ஊழல் மோசடிகளை ஆராய விசேட நிதிக்குற்றவியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.