Breaking News

மக்களின சாதாரண போராட்டத்தை ஈழப்போராக்கும் மகிந்த! சம்பிக்க குற்றச்சாட்டு

புலிப்பூச்சாண்டி காட்டி நாட்டில் மீண்டும் இன­வா­தத்தை பரப்ப முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச முயற்­சிக்­கின்றார். மக்­களின் சாதா­ரண போராட்­டத்தை மீண்­டு­மொரு ஈழப் போராட்­ட­மாக சித்­திரித்து நாட்டை குழப்ப முயற்­சிகள் மேற்­கொள்­ளகிறார் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கில் மீண்டும் பிரி­வி­னைக்­கான போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும், அதனால் வடக்­கிற்­கான எரி­பொருள் விநியோகத்தை அர­சாங்கம் நிறுத்­தி­விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளப்பிவிட்ட புரளிக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

‘வடக்கில் புலிப் பயங்­க­ர­வாதம் தலை­தூக்கப் போவ­தில்லை. கடந்த 2009 ஆம் ஆண்­டுடன் இலங்­கையில் அனைத்து புலி­க­ளையும் எமது இரா­ணுவ வீரர்கள் அழித்­து­விட்­டனர். சர்­வ­தேச நாடு­களில் இருக்கும் புலம்­பெயர் புலி அமைப்­பு­களை இலங்­கைக்குள் அனு­ம­திக்­காது கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த உள்­ளிட்ட ஒரு­சி­ல­ருக்கு மீண்டும் இன­வாதம் மற்றும் பயங்­க­ர­வாதம் தேவைப்­ப­டு­கின்­றது. தமது அர­சி­யலை இன­வா­தத்­தி­னூ­டாக மட்­டுமே கொண்டு செல்ல முடி­யு­மென இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். ஆனால் அதை நாம் இனிமேல் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கில் கொல்­லப்­பட்ட பாட­சாலை மாண­வியின் கொலையை பயங்­க­ர­வா­த­மாக மாற்றி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். மக்­களின் கோபத்தை அர­சியல் சூழ்ச்­சி­யாக மாற்றி அதில் ஆட்­சியை கைப்­பற்ற இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். ஆனால் ஒரு போதும் அது நடை­பெறப் போவ­தில்லை.

கடந்த அர­சாங்­கத்தில் புலி­களை அழித்­த­தாக கூறும் இவர்கள் 2005 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பண உத­வி­களை செய்­தனர் என்ற குற்றச் சாட்டை இது­வரை யாரும் மறுக்­க­வில்லை. இர­க­சிய பொலி­ஸா­ரி­டமும் இது தொடர்பில் வாக்­கு­மூலம் கொடுத்­துள்­ளனர். ஆகவே மஹிந்த அர­சாங்கம் புலி­களை பாது­காத்­துள்­ளது என்­பது உண்­மை­யாகும்.

அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா ஆகி­யோரை புலிகள் கொலை­செய்ய முயற்­சித்த போதிலும் அப்­போ­தைய அர­சாங்கம் புலி­க­ளுக்கு வாகன உத­வி­களை வழங்­கி­யுள்­ளது. ஆகவே இவர்கள் யாரும் புலி­களை அழித்­த­தாக உரிமை கோர முடி­யாது. எமது இரா­ணுவ வீரர்­களின் உயிர் தியா­கத்தை மதித்து இந்த நாட்டை அனை­வரும் ஒன்­றி­ணைந்து காப்­பாற்ற வேண்டும். வடக்கில் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக பொய்ப்­பி­ர­சாரம் மேற்­கொண்டு மீண்டும் நாட்டை குழப்ப முயற்­சிக்க வேண்டாம்.

மேலும் வடக்கில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­கர நிலை­மையில் வட மாகா­ணத்­துக்­கான எரி­பொருள் வழங்­கு­வதை நாம் தடுத்­த­தாக சுமத்தும் குற்­றச்­சாட்டு பொய்­யா­னது. வடக்­குக்கு தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரி­பொருள் அனுப்­ப­ப்ப­டு­கின்­றது. வடக்கில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­கர சூழல் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்துள்ளது. அத்தோடு வடக்குக்கான எரிபொருளை தடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. ஒரு சிலரின் பொய் கருத்துக்களை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்க முயற்சிக்கின்றமை சாத்தியமற்ற தொன்றாகும். மக்களை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.