Breaking News

சுப்பிரமணியன் கருத்துக்கும் பா.ஜ.க.விற்கும் சம்பந்தமில்லை - தமிழிசை

ஜெய­ல­லிதா வழக்கில் கர்­நா­டக அரசு மேன்­மு­றை­யீடு செய்­யா­விட்டால் நான் செய்வேன் என்று சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி கூறி­யி­ருப்­பது பா.ஜ.க.வின் கருத்து அல்ல, அது சுவா­மியின் சொந்தக் கருத்து என்று தமி­ழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமி­ழிசை செளந்­த­ர­ராஜன் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா விடு­த­லைக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இருப்­ப­தாக பலரும் யூகிக்­கி­றார்கள். பா.ஜ.க. ஊழல் இல்­லாத இயக்கம். வழக்கில் தலை­யிடும் பழக்கம் எங்­க­ளுக்கு இல்லை. இந்த தீர்ப்பு எதிர்­பா­ராத தீர்ப்பு என்­பது அனை­வரும் அறிந்­த­துதான். ஏதா­வது ஒரு தண்­ட­னையோ அல்­லது கண்­ட­னமோ இருக்கும் என்று அனை­வ­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அப்­படி எதுவும் இல்­லாமல் எதிர்­பா­ராத தீர்ப்­பாக அமைந்து விட்­டது. ஆனாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அத­னால்தான் நான் வாழ்த்து சொன்னேன். பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியும் வாழ்த்து சொன்னார். இதுதான் அர­சியல் நாக­ரீகம்.

ஜெய­ல­லிதா வழக்கின் தீர்ப்­புக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீண்டும் முதல்­வ­ராக பத­வி­யேற்க உள்ளார். விடு­தலை ஆனதால் அவ­ருக்கு நிம்­மதி கிடைத்­துள்­ளது. நான் ஏற்­க­னவே கூறி­யது போல, அந்த நிம்­மதி தமி­ழக மக்­க­ளுக்கும் கிடைக்க வேண்டும். தமி­ழகம் ஊழல் இல்­லாத மாநி­ல­மாக இருக்க வேண்டும்.

ஜெய­ல­லிதா விடு­த­லையை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்தில் கர்­நா­டக அரசு மேன்­மு­றை­யீடு செய்­யா­விட்டால், தான் மேன்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி கூறி­யி­ருப்­பது அவ­ரது சொந்த கருத்து. இதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை.

தமி­ழ­கத்தில் பா.ஜ.க. மிகப்­பெ­ரிய சக்­தி­யாக உரு­வெ­டுத்து இருக்­கி­றது. இது­வரை 40 இலட்சம் உறுப்­பி­னர்கள் சேர்ந்­தி­ருக்­கி­றார்கள். இன்னும் 3 மாதங்கள் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம். சட்­ட­சபைத் தேர்­தலைப் பொறுத்­த­வரை அந்தத் தேர்­தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. . தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து அதை தீர்மானித்து முடிவு செய்வோம் என்றார்.