Breaking News

மேன்­மு­றை­யீட்­டுக்கு பரிந்­துரை அதிர்ச்சியில் ஜெயலலிதா

ஜெய­லலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேன்முறை­யீடு செய்ய கர்­நா­டகா அரசின் தலைமை வழக்­க­றிஞர், அம்­மா­நில அர­சுக்கு பரிந்­துரை கடிதம் அனுப்­பி­யுள்ளார். இதனால் இந்த வழக்கில் மீண்டும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சொத்­துக்­கு­விப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவை விடு­தலை செய்து கர்­நா­டகா உயர் நீதி­மன்ற சிறப்பு நீதி­பதி குமா­ர­சாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவ­ரது தோழி சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோ­ருக்கும் விடு­தலை அளிக்­கப்­பட்­ட­தோடு, அவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தமும் இரத்துச் செய்­யப்­பட்­டது.

இந்த தீர்ப்பில் கணக்குப் பிழை இருப்­ப­தாகக் கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்­நா­டகா அரசு மேன்­மு­றை­யீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்­கிரஸ், மார்க்சிஸ்ட் உள்­ளிட்ட கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்த நிலையில் ஜெய­ல­லிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதி­மன்­றத்தில் மேன்முறை­யீடு செய்­யலாம் என கர்­நா­டகா அரசின் தலைமை வழக்­க­றிஞர் ரவி­வர்ம குமார், கர்­நா­டகா சட்­டத்­துறை அமைச்சர் ஜெய­சந்­தி­ரா­வுக்கு பரிந்­துரை கடிதம் அனுப்பியுள்ளார்.