Breaking News

பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் வெளி­யேற வேண்டும்! இல்­லையேல் வெளி­யேற்­றுவோம்

பிர­தமர் ரணில்­ விக்­ர­ம­சிங்­க­விற்கு அப்­ப­த­வியில் இருக்க சட்ட ரீதி­யான அங்­கீ­கா­ரமோ மக்கள் ஆணையோ கிடை­யாது. எனவே பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற வேண்டும். இல்­லா­விட்டால் வெளி­யேற்­றுவோம் என எதிர்­க்கட்­சியின் பிர­தம கொற­டாவும் எம்.­பி­யு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு 70 க்கு மேற்­பட்ட எம்.பி. க்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தா­கவும் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் சபா­நா­ய­க­ருக்கு கை ய­ளிக்­கப்­ப­டு­மென்றும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஜோன் சென­வி­ரட்ன எம்.பி மேலும் தெரி­விக்­கையில், பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­தற்கு ரணில் விக்­கிர­ம­சி ங்­கவிற்கு எந்த வித­மான சட்ட ரீதி­யான அங்­ கீ­கா­ரமோ அல்­லது மக்கள் ஆணையோ கிடை­யாது. பலாத்­கா­ர­மா­கவே அப்­ப­த­வி யில் இருக்­கின்றார்.

எனவே அப்­ப­த­வி­யி­லி­ருந்து அவர் வெளி­யேற வேண்டும். தொடர்ந்து பலாத்­கா­ர­மாக இருந்தால் வெளி­யேற்­றுவோம்.அதற்­கா­கவே அவ­ருக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வர­வு ள்ளோம். இதில் தற்­போது 70 க்கு மேற்­ப ட்ட எம்.பி.க்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் இதனை சபா­நா­ய­க­ருக்கு கைய­ளிப்போம். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் தொடர்­பில்லை. ஐக்­கிய மக் கள் சுதந்­திர முன்­ன ­ணியின் கட்சித் தலை­வர்­க­ளி­னதும் உறுப்­பி­னர்­க­ளுமே இதனை முன்­னெ­டுக்­கின்­றனர்.

அத்­தோடு 100 நாட்­க­ளுக்­குத்தான் ரணில் பிர­த­ம­ரா­வ­தற்கு ஆத­ரவு வழங்­கினோம். இன்று 100 நாட்கள் கடந்து விட்­டன. இனி யும் ஆத­ரவை தொடர முடி­யாது. அதே­வேளை பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் அதி­கா­ரமும் பிர­த­ம­ருக்கு கிடை­யாது. 

2010 ஆண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வழங்­கிய ஆணையே இன்றும் பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளது. எனவே ஆட்­சியை எமக்கு கையளிக்க வேண்டும். பின்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னர் எமது ஆட்சியின் கீழேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டு மென் றும் ஜோன் செனவிரட்ன எம்.பி தெரிவித் தார்.