Breaking News

வரதராஜப்பெருமாளின் பாதையில் பயணிக்கும் விக்கினேஸ்வரன் - சுசில் பிரேம்ஜயந்த

வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் அன்று எவ்­வாறு தனது தனி­நாட்டுக் கோரிக்­கையை ஆரம்­பித்­தாரோ அதையே இன்று வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் முன்­னெ­டுத்து செல்­கின்றார். இவர்கள் தெரி­விப்­ப­தைப்போல் வடக்குக் ,கிழக்கு பூமி அவர்­களின் தாயகம் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.

வடக்கில் பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யி­ருந்தால் புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் படு­கொலை இடம்­பெற்­றி­ருக்­காது. எனவே மாணவி வித்­தி­யாவின் கொலைக்கு அர­சாங்­கமே பொறுப்புக் கூற­வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இரா­ணுவ கட்­டுப்­பாட்டில் இருந்­த­போது இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­ற­வில்லை. ஆனால் இன்று தனிப்­பட்ட அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பொலி­ஸாரின் கைகளை கட்­டிப்­போட்­டு­வி­ட­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் நாம் எமது அனு­தா­பங்­களை தெரி­விக்­கின்றோம். இந்த மாண­விக்கு நடந்த மிகக் கொடூ­ர­மான மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பாட்டில் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும். அப்­பாவி பெண்­களின் மானத்­தையும் உயி­ரையும் பறிக்கும் நபர்கள் தொடர்பில் நாம் எமது கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­விக்­கின்றோம்.அதேபோல் இந்த மாண­வியின் ஆத்மா சாந்­தி­ய­டை­யவும் நாம் இறை­வனை பிரார்த்­திக்­கின்றோம்.

எனினும் இந்த படு­கொலை சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் சொல்லும் செய்தி என்­ன­வென்­பதை மக்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். எமது ஆட்­சியில் யுத்­தத்­துக்கு பின்­ன­ரான கடந்த ஐந்து ஆண்­டு­களில் வடக்கில் இவ்­வா­றான மோச­மான சம்­பவம் எதுவும் நடை­பெ­ற­வில்லை. ஒரு மாண­வியை ஒன்­பது ஆண்கள் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. இது மிகவும் மோச­மா­ன­தொரு நிலை­மை­யாகும். 

இவ்­வாறு மிரு­கத்­த­ன­மான சம்­ப­வங்கள் இலங்­கையில் இடம்­பெ­று­வது மிகவும் குறை­வாகும். வடக்கில் பொலிஸ் பாது­காப்பு சரி­யாக இருக்­கு­மானால் யாரும் இவ்­வா­றான செயற்­பா­டு­களை செய்ய மாட்­டார்கள். ஆனால் இந்த அர­சாங்கம் நல்­லாட்சி, மனித உரி­மைகள் பற்றி பேசிக்­கொண்டு மக்­களை சீர­ழிக்கும் வகையில் தமது பாது­காப்­பு­களை மேற்­கொள்­கின்­றது.

ஜனா­தி­பதி வடக்­குக்கு சென்று அங்­குள்ள நில­வ­ரங்­களை மாற்­றி­ய­மைக்க கோரு­கின்றார். ஆனால் சட்ட ஒழுங்­கு­க­ளுக்கு பொறுப்­பான அமைச்சர் வாய் மூடி நடப்­ப­வற்றை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். இதுதான் எமது கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் உள்ள வேறு­பாடு என்­பதை மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும். வடக்கில் பொலிஸ் பாது­காப்பை அதி­க­ரித்து கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்தால் இந்த மாண­வியின் படு­கொலை இடம்­பெற்­றி­ருக்­காது .ஆனால் அர­சாங்கம் வடக்கில் சிவில் செயற்­பா­டு­களை தடுத்து பொலி­ஸாரின் கைகளை கட்­டிப்­போட்­டு­விட்­டனர். 

எனவே இந்த மாண­வியின் படு­கொ­லைக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கமே பொறுப்புக் கூற வேண்டும். ஒரு சிலரின் தனிப்­பட்ட அர­சியல் தேவை­க­ளுக்­காக வடக்கில் பாது­காப்பு அகற்­றப்­பட்டு விட்­டது. எனவே இந்த ஒரு சம்­ப­வத்­துடன் குற்­றங்கள் முடி­யப்­போ­வ­தில்லை. நாட்டில் சிவில் பாது­காப்பும் தேசிய பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­ப­டா­விடின் இந்த மாண­விக்கு நடந்த கொடு­மை­யைப்போல் இன்னும் பல மாண­விகள் சீர­ழிக்­கப்­ப­டு­வார்கள்.

எமது ஆட்­சியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகு­தி­களில் இரா­ணு­வத்தின் பாது­காப்பு பல­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எமது இரா­ணுவ வீரர்கள் மக்­க­ளோடு மக்­களாய் ஒன்­றி­ணைந்து அவர்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்­தினர். வடக்கில் சில அசம்­பா­வி­தங்கள் நடந்­தி­ருந்­தாலும் இவ்­வா­றான மோச­மான செயற்­பா­டுகள் எவையும் நடக்­க­வில்லை. ஆனால் இன்று நடப்­பவை மிகவும் கொடு­மை­யா­னது.

இந்­நி­லையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இரா­ணுவ வீரர்­களே யுத்த குற்­றத்தை பொறுப்­பேற்க வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருப்­பது மிகவும் மோச­மா­ன­தொரு கருத்­தாகும். இலங்கை மீதான ஜெனிவா அறிக்கை வர­முன்­னரே இவர்கள் இங்­கி­ருந்து அறிக்­கை­யினை தெரி­வித்து விட்­டனர். வடக்கு, கிழக்கை தமது பூமி­யாக மாற்­றிக்­கொள்ள இவர்கள் எடுக்கும் முயற்­சியே இவை அனைத்­து­மாகும். 

அன்று வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் எவ்­வாறு தனது தனி­நாட்டு கோரிக்­கையை ஆரம்­பித்­தாரோ அதையே இன்று வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் முன்­னெ­டுத்து செல்­கின்றார். இவர்கள் தெரி­விப்­ப­தைப்போல் வடக்குக் ,கிழக்கு பூமி அவர்­களின் தாயகம் அல்ல. இது இலங்கை என்ற நாடு. இங்கு அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழவேண்டும். மேலும் வடக்கில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது அவற்றை பிரதமர் கவனத்தில் கொள்ளாதுள்ளார். 

ஆனால் புங்குடுதீவு மாணவி விடயத்தில் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை மன்னிப்பு கேற்க சொல்கின்றனர். எனவே இந்த அரசாங்கத்தில் முழுமையாக பழிவாங்கும் அரசியல் மட்டுமே இடம்பெறுகின்றது என்றார்.