இலங்கை கிரிக்கெட் அணிக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக ஜொண்டி
இலங்கை அணியின் களத்தடுப்பை கட்டியெழுப்ப தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜொண்டி ரோட்ஸ் முன்வந்துள்ளார்.
இலங்கையில் தங்கியிருந்து பத்து நாட்கள் களத்தடுப்பு பயிற்சிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுத் தொடர்வரை ஜொண்டி ரோட்ஸ் களத்தடுப்பு பயிற்சியாளராகச் செயற்படவிருக்கிறார்.
அதுதவிர தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இளைய கிரிக்கெட் அணிவீரர்களுக்கான களத்தடுப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கே அவர் இலங்கை வருகிறார். அதேவேளை களத்தடுப்பில் உள்ள புதிய தொழில்நுட்பம் குறித்தும் அவர் பயிற்சிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது.