இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதப்போவது சென்னை கிங்ஸா – பெங்களூர் ரோயல்ஸா
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று ராஞ்சியில் 2ஆவது தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது.
இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. இதில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், வெளியேற்றுதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பையுடன் தோற்றது. இன்னொரு வாய்ப்பாக 2ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூருடன் இன்று மோதுகிறது. இதை பயன்படுத்தி கொள்வது அவசியம்.
மும்பைக்கு எதிராக சென்னையின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும். மேலும் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். சுரேஷ் ரெய்னா அதிரடியை வெளிபடுத்தினால் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும்.
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 3ஆவது இடத்தை பிடித்தது. அந்த அணி ராஜஸ்தானை வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மேலும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள்.
இதனால் சென்னை அணிக்கு எல்லா வகையிலும் பெங்களூர் கடும் சவால் கொடுக்கும். பெங்களூரை வீழ்த்த சென்னை அணி முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் போட்டி நடக்கிறது. இதனால் சென்னை அணிக்கு அதிகளவு ஆதரவு இருக்கும். சரி பொறுத்திருந்து பார்ப் போம் இந்தப்போட்டியில் ஜெயித்து இறுதிப்போட்டியில் மும்பையை எதிர் கொள்ளப்போவது யார் என்று.