Breaking News

உலகக் கிண்ணக் கால்பந்து மைதான கட்டுமானப் பணியில் சிறைக்கைதிகள்

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்­பந்து போட்டி ரஷ்­யாவில் நடை­பெ­ற­வுள்­ளது. 

முதல் முறை­யாக இந்த நாட்டில் உலகக் கிண்ணப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளதால் பிர­மாண்­ட­மாக போட்­டியை நடத்திக் காட்ட ரஷ்யா முடிவு செய்­துள்­ளது. தலை­நகர் மாஸ்கோ, செயின்ட் பீட்­டர்ஸ்பர்க், கசான், சமரா, சோச்சி உள்­ளிட்ட 11 நக­ரங்­களில் போட்­டிக்­கான மைதா­னங்­களை புன­ர­மைக்­கவும் புதுப்­பித்து கட்­டவும் ரஷ்ய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக சுமார் 12.7 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வாகும் என்று திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் செலவுத் தொகையை கட்­டுப்­ப­டுத்த ரஷ்ய அரசு முடிவு செய்­துள்­ளது. இதனால் கட்­டு­மா­னப்­ப­ணி­களில் சிறைக் கைதி­களை பயன்­ப­டுத்த ரஷ்ய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­கான சட்ட நுணுக்­கங்­களை ரஷ்ய சட்­டத்­துறை ஆராய்ந்து வரு­கி­றது. ஏற்­க­னவே ரஷ்­யாவில் கைதி­களை அதிக நேரம் வேலை வாங்கி விட்டு குறைந்த அளவே ஊதியம் அளிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது.