Breaking News

பீட்டர்சனுக்கு அணியில் இடமுமில்லை ஐ.பி.எல்.இல் விளையாடவுமில்லை

இங்­கி­லாந்து அணியில் இடம் கிடைக்­கா­த­தை­ய­டுத்து கெவின் பீட்­டர்சன் ஹைத­ரபாத் அணியில் இணைவார் என்று சொல்­லப்­பட்ட நிலையில், காயம் கார­ண­மாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் பங்­கேற்­க­வில்லை.

அண்­மையில் சர்ரே அணிக்­காக உள்ளூர் கிரிக்­கெட்டில் கெவின் பீட்­டர்சன் 355 ஓட்­டங்­களைக் குவித்தார். இதனால் இங்­கி­லாந்து அணியில் கெவின் பீட்­டர்­ச­னுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்று கரு­தப்­பட்­டது. ஆனால் அவ­ருக்கு இங்­கி­லாந்து அணியில் இடம் கிடைக்­க­வில்லை. கெவின் பீட்­டர்சன் மீது இன்னும் இங்­கி­லாந்து அணிக்கு நம்­பிக்

கை ஏற்­ப­ட­வில் லை என்று நிர்­வாகத் தரப்பில் கூறப்­பட்­டது.

இதனால் ஏமாற்­ற­ம­டைந்த பீட்­டர் சன் ஐ.பி.எல். தொடரில் ஹைத­ராபாத் அணிக்­காக விளை­யாடும் முடி­வுக்கு வந்தார். கடந்த பெப்­ர­வரி மாதம் நடந்த ஏலத்தில் ஹைத­ராபாத் சன்­ரைசர்ஸ் அணி ரூ. 2 கோடி கொடுத்து அவரை ஒப்­பந்தம் செய்­தி­ருந்­தது. இங்­கி­லாந்து அணியில் இடம் கிடைக்­கா­த­தை­ய­டுத்து, கெவின் பீட்­டர்சன் மீண்டும் சன்­ரைசர்ஸ் அணிக்­காக விளை­யா­ட­வுள்­ள­தாக அந்த அணியின் தலைமை செயல் அதி­காரி தெரி­வித்தார். 

இந்­நிலையில் கெவின் பீட்­டர்சன் லீஷெஸ்­டர் ஷைர் அணிக்­காக விளையாடும் போது குதிக்­காலில் காயம் ஏற்­பட்­ட­தா­கவும் இது தொடர்­பாக அவர் லண்­டனில் மருத்­து­வ சி­கிச்சை மேற்­கொள்­ள­ வி­ருப்­பதாலும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் ஹைத­ராபாத் அணியில் மீண்டும் இணையவில்லை என கூறப்படுகிறது