Breaking News

ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு எதி­ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்­பாடு

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ரமசிங்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்­பா­டொன்று நேற்று செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சபை உறுப்­பினர் உதய கம்­மன்­பி­ல­வினால் இந்த முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஊட­க­வி­ய­லளர் சந்­திப்­பொன்றை நடத்­திய தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் அப்­போ­தைய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மா­கிய மைதி­ரி­பால சிறி­சேன தான் தேர்­தலில் வெர்றி பெற்றால் பிர­த­ம­ராக ஐக்­கிய தேசிய கட்­சியின் ரணில் விக்­ர­ம­சிங்­கவை நிய­மிப்­ப­தாக கூறிய கருத்து இலஞ்சம் என குறிப்­பிட்டே இந்த முறைப்­பாடு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கொழும்பு மல­ல­சே­கர மாவத்­தையில் உள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு­விற்கு நேற்று மாலை 3.00 மணிக்கு சென்ற மேல் மாகாண சபை உறுப்­பினர் உதய கம்மன் பில தல­மை­யி­லான 7 பேர் கொண்ட குழு­வினர் இந்த முறைப்­பாட்­டினை அளித்­தனர்.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனா­தி­பதி சட்­டத்தின் கீழ், ஜனா­தி­பதி தேர்­தலில் தனது வெற்­றியை உறுதி செய்­து­கொள்ள பதவி தொடர்­பி­லான உறுதி­களை வழங்­குதல், பத­வி­களை பொறுப்­பேற்றல் போன்­றன இலஞ்ச குற்­ற­மாகும். அதன்­படி ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிரி­சேன ஜனா­தி­பதி தேர்தல் வெற்­ரிக்­காக உழைக்கும் பொருட்டு பத­வி­யொன்றை தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அதன் பின்னர் அந்த பத­வியை வழங்­கி­யுள்­ள­தா­கவும் இது அவர் செய்த இலஞ்சம் வழங்­கிய குற்றம் எனவும் அந்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் குறித்த முறைப்­பாட்டை அளித்த மேல் மாகாண சபை உறுப்­பினர் உதய கம்­மன்­பில ஊட­கங்­க­ளிடம் குறிப்பிடுகையில், அர­சாங்­கத்தின் 100 நாள் நிறைவு பெற்­று­விட்­டது. இனி எமது 100 நாள் திட்­டமே உள்­ளது. இப்­பொ­ழுது முதல் ஒவ்­வொரு வாரமும் நாம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு வந்து அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் அதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகளைச் செய்வோம்.' என்றார்.