Breaking News

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கையின் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக மீனவசங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, என்.தேவதாஸ் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபாலவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் இந்தச் சந்திப்புக்குறித்து பி.ரி.ஐ. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவைச் சந்தித்தோம். அப்போது, இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள இந்திய மீனவர்களின் 25 படகுகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. 

மேலும், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலான கூட்டத்துக்கும், மீனவர்கள் நிலையிலான கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்வார் என சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார். - என்றார் ஜேசுராஜா. "இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி, கைதுசெய்து வருவதால், பாக்கு நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுத்தோம்" - என்றும் தேவதாஸ் கூறினார்.