Breaking News

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோம் வடமாகாண தவிசாளர் தெரிவிப்பு

போரின் போது உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகா­ண­சபைத் தவி­சாளர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்­துள்ளார்.

மே 18ஆம் திக­தியை கடந்த அர­சாங்கம் போர் வெற்றி நாளாக கொண்­டாடி வந்த நிலையில் புதிய அரசு நினை­வு­தி­ன­மாக கடைப்­பி­டிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் கருத்துக் கேட்­ட­போதே சி.வி.கே.சிவ­ஞானம் மேற்­கண்ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த போரின் போது உயிர்­து­றந்த போரா­ளிகள், மாம­னி­தர்கள் மற்றும் மக்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு எவரும் தடை­வி­திக்க முடி­யாது. கடந்த காலங்­களில் இவ்­வா­றான நினைவு நிகழ்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை­களும் நெருக்­க­டிகளும் ஏற்­ப­டுத்­த­ப்­பட்­டு­ வந்­தன.

தற்­போ­தைய அர­சாங்கம் போர் வெற்றி நாளை கைவிட்டு மே 18ஐ நினைவு தின­மாக கடைப்­பி­டிக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. இந்த விடயம் இறு­திப்­போரில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­கான ஒரு சூழலாக அமைவதாகவே பார்க்கமுடியும். எனவே இறுதிப்போரில் உயிரிழந்த வர்களை நினைவுகூருவோம் என்றும் தெரிவித்தார்.