Breaking News

ரணிலும்- வாசுவும் அரசியல் இலட்சணங்கள்

இலங்கை சன­நா­யக சோச­லி­சக்­கு­டி­ய­ரசின் உய­ரிய நிறு­வ­ன­மாக சட்­ட­வாக்க சபை­யினை சுட்டி நிற்­கின்­ற­தாக பாரா­ளு­மன்றம் விளங்கி வருகின்­றது.

இன்­றைய கால கட்­டத்தில் பாரா­ளு­மன்றம் எனப்­பெ­ய­ரி­டப்­ப­டு­கின்­றதும் சட்­ட­வாக்­கச்­சபை என்று காணப்­ப­டு­கின்­ற­து­மான இவ்­வு­ய­ரிய நிறு­வனம் முதல்­மு­றை­யாக 1833ஆம் ஆண்டில் இலங்­கையில் முத­லா­வது சட்­ட­வாக்­கச்­ச­பை­யாக ஸ்தாபிக்­கப்­பட்­டது.

காலி­மு­கத்­தி­டலில் கடலை நோக்கி அமைந்­துள்­ள­தான பழைய பாரா­ளு­மன்றம் என அழைக்­கப்­ப­டு­கின்ற கட்­டிட தொகுதி 1930 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 29ஆம் திகதி திறந்து வைக்­கப்­பட்­டதன் பின்னர் மேற்­படி சட்­ட­வாக்க சபையின் செயற்­பா­டுகள் அங்­கேயே இயங்­கி வந்தன. இதன் பின்னர் 1982 ஆம் ஆண்டில் கோட்டே ஸ்ரீ ஜய­வர்­த­ன­பு­ரவில் அமை­யப்­பெற்ற புதிய பாரா­ளு­மன்ற கட்­டிட தொகு­திக்கு இச்­செ­யற்­பா­டுகள் அனைத்தும் இடம்­பெ­யர்ந்­தன.

சட்­ட­வாக்க பேர­வை­யா­னது 1931 -– 1947 ஆம் ஆண்டு காலப்­ப­குதி வரையில் 61 உறுப்­பி­னர்­க­ளுடன் ராஜ்ய சபை­யாக செயற்­பட்டு 1947 முதல் 1972 வரை­யான காலப்­ப­கு­தியில் பிரதி நிதிகள் சபை­யாக வளர்ச்­சி­ய­டைந்­தது. பிர­தி­நி­திகள் சபையில் முதலில் 101 உறுப்­பி­னர்­களே அங்கம் வகித்த போதிலும் 1960 ஆம் ஆண்டின் பின்னர் இந்த சபையின் உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்கை 157 ஆக உயர்­வ­டைந்­தது.

பிரதிநிதிகள் சபை­யாக இருந்து 1972 முதல் 1978 வரையில் 168 உறுப்­பி­னர்­களை கொண்­டதாக தேசிய அர­சுப்­பே­ர­வை­யாக தோற்றம் பெற்று 1978ஆம் ஆண்டின் பின்னர் 225 உறுப்­பி­னர்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­ற­மாக தோற்றம் பெற்­றது.

இத்­த­கைய வர­லா­று­க­ளையும் அழியாத் தோற்­றப்­பா­டு­க­ளையும் கொண்­ட­மைந்­துள்­ள­தான இலங்கை சன­நா­யக சோச­லிச குடி­ய­ர சின் 225 மக்கள் பிர­தி­நி­தி­களை கொண்­ட­மைந்­துள்ள பாரா­ளு­மன்றம் என்­ற­ அதி உச்ச சபை­யா­னது இன்று கேலிக்­கூத்­தா­டி­களின் கூட­மா­கவும் உருப்­பெற்று வரு­கி­றது.

கடந்த சுமார் பத்து வருட காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்­றத்தின் உய­ரி­யத்­தன்­மைக்கு பாதகம் ஏற்­பட்­டுள்­ளமை வர­லாற்றில் பதிந்­துள்­ளது. அதிலும் 2010ஆம் ஆண்டின் பின்னர் அமைந்­த­தான ஏழா­வது பாரா­ளு­மன்­றத்தின் செயற்­பாட்டு நட­வ­டிக்­கை­களும் அங்கு உறுப்­பி­னர்­க­ளது செயற்­பா­டு­களும் இலங்கை தேச த்­தையும் வாக்­கா­ளர்­க­ளையும் தலை­கு­னிய வைத்­துள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சா ங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தின் போது பாரா­ ளு­மன்றம் அவ்­வ­ர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருந்­தது. ஆதலால் அந்த சந்­தர்ப்­ப த்தில் எதிர்க்­கட்­சியின் குரல்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குள் நசுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இன்று அந்த நிலைமை தலை­கீழாய் மாறிப்­போ­யுள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் இந்­நாட்டின் இடம்­பெற்­ற­தான தேர்தல் புரட்­சியின் கார­ண­மாக இந்த தலைகீழ் மாற்றம் உரு­வா­னது. அதன் பல­னாக பாரா­ளு­மன்றம் ஆட்­சி­யா­ளர்­களின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு சுதந்­தி­ர­மா­கவும் சுயா­தீன சபை­யா­கவும் இயங்கச் செய்­வ­தற்­கான வழி வகைகள் உரு­வாக்கி கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

அது மாத்­தி­ர­மின்றி தேசிய அர­சாங்கம் ஒன் றும் அமை­யப்­பெற்­றுள்­ளது. பாரா­ளு­மன்­றத் தின் இன்­றைய நிலையை பொறுத்த வரையில் அது தேசிய அர­சாங்கம் ஒன்­றையே கொண்­டி­ருக்­கின்­றது. ஆளும் கட்­சியும் எதிர்க்­கட்­சியும் இணைந்து நாட்டின் தேவை கரு­தி ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­ப­டு­வதே தேசிய அர­சாங்கம் என விளிக்­கப்­ப­டு­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­து­கின்­ற­தான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்தே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியும் (ஜே.வி.பி) கூட அர­சாங்­க த்தின் தேசிய நிறை­வேற்று சபையில் அங்கம் வகித்­தி­ருப்­பதன் அடிப்­ப­டையில் அக்­கட்­சி­க­ளும் தேசிய அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருக்­கின்­றன.

ஆகையால் தேசிய அர­சாங்கம் ஒன்று நாடொன்றில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்பின் அங்கு எதிர்க்­கட்சி என்ற பத­மா­னது வலு­வி­ழந்தே காணப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் இங்கு எதிர்க்­கட்சி ஒன்று விரும்­பியோ விரும்­பா­மலோ செயற்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி தேசிய அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­க­மாக வர்­ணித்து காட்­டப்­ப­டு­கின்­றது.

குறைந்­த­ள­வி­லான உறுப்­பி­னர்­களை கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசிய கட்சி முழு­மை­யாக தேசிய அர­சாங்­கத்தில் உள்­வாங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­லேயே எதிர்க்­கட்­சி­யினர் சிறு­ பான்மை அர­சாங்கம் என்று பிர­சா­ரப்­ப­டுத்­து­கின்­றனர். இது உண்­மையில் படு மோச­மான மக்கள் ஏமாற்று நாட­க­மா­கவே இருக்­கின்­றது.

மக்­களை தெளி­வ­டை­யா­மலும் விழிப்­ப­டை­யா­மலும் தடுத்து தொடர்ந்தும் அவர்­களை முட்­டாள்­க­ளாக சித்­த­ரித்து காட்­டு­வ­தற்கே இன்­றைய எதிர்ப்பு அர­சியல் வாதிகள் முற்­ப ட்டு வரு­கின்­றனர். இன்­றைய பாரா­ளு­மன்­றத்தை பொறுத்­த­வ­ரையில் கனவான் அர­சியல் இலட்­ச­ணத்­துக்­கு­ரி­ய­வர்­கள் என்று ஒரு சிலரே மிளிர்ந்து வரு­கின்­றனர்.

இவர்­களில் இன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பேரா­சி­ரியர் திஸ்ஸ வித்­தா­ரண, டியூ குண­சே­கர, கலா­நிதி சரத் அமு­னு­கம, சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ஷ இரா. சம்­பந்தன் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ், ஏ.எச்.எம். பௌசி, மகிந்த சம­ர­சிங்க உள்­ளிட்ட சிலரை குறிப்­பிட்­டுக்­கூற முடியும். எனினும் பாரா­ளு­மன்­றத்தின் கௌர­வத்தை கொச்­சைப்­ப­டுத்தும் வகை­யிலும் அதன் உய­ரி­யத்­தன்­மையை கீழ்­ நி­லைப்­ப­டுத்தும் வகை­யிலும் செயற்­பட்டு பாரா­ளு­மன்­றத்தை அவப்­பெ­ய­ருக்கு இட்டு செல்­வ­தற்கும் பல உறுப்­பி­னர்கள் செயற்­ப ட்டு வரு­கின்­றனர்.

2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­தலில் வெற்றி பெற்று சில பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தந்த இளை­ய­வர்­க­ளான சில புதிய எம்.பிக்­களின் செயற்­பா­டு­களே பாரா­ளு­மன்­றத்தின் உய­ரிய தன்­மையை பாதிக்­கின்­றன.

கனவான் அர­சி­யல்­வா­திகள் என்ற ரீதி­யிலும் மூத்த அர­சி­யல்­வா­திகள் என்ற ரீதி­யிலும் செயற்­ப­டு­வ­தற்கு தவ­று­கின்ற பல சந்­தர்ப்­பங்கள் அமைந்­துள்­ளன. பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம், அர­சியல் நாக­ரீகம் என்­ப­வற்றை கற்று தேற வேண்­டிய பல சந்­தர்ப்­பங்கள் பாரா­ளு­மன்­றத்தில் தவற விடப்­ப­டு­கின்­றன. இன்­றைய பாரா­ளு­மன்­றத்தை பொறுத்த வரையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ ­பக் ஷவின் நிகழ்ச்சி நிர­லுக்­க­மை­யவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர் கள் சிலர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே புதிய அர­சாங்­க த்­தி­னதும் ஜனா­தி­பதி ‑மைத்­தி­ரி­பால சிறி­சே­ன ­வி­னதும் நிகழ்ச்சி நிர­லுக்கு தடங்­கல்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். அந்த வகை­யி­லேயே ஐ.ம.சு.மு. உறுப்­பி­னர்கள் சிலர் உய­ரிய சபை­யான பாரா­ளு­மன்­றத்தை படுக்கை அறை­யாக மாற்­றி­ய­மைத்­தனர்.

மஹிந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டை­யி­லேயே கனவான் அர­சியல் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது தண்ணீர் போத்­தலால் பாரா­ளு­மன்­றத்­துக்­குள்­ளேயே தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே அமரர் டாக்டர் ஜயலத் ஜய­வர்த்­தன மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்கு எத்­த­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த அடிப்­ப­டை­களின் இன்னொரு வடி­வ­ மாக கடந்த வியா­ழக்­கி­ழமை முன்னாள் அமைச்­ச­ரான வாசு­தேவ நாண­யக்­கார என்ற சிரேஷ்ட அர­சியல் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்­றத்­துக்குள் கெட்ட வார்த்­தை­களால் தூசித்து அவ­ரையும் அவ­ரது பத­வி­யையும் அகௌ­ர­வத்­துக்­குட்­ப­டுத்­தி­யி­ருந் தமை அமைந்­துள்­ளது. பிர­த­மரை பைத்­தி­யக்­ காரன் என்றும் நீ என்றும் விளித்­த­துடன் எழு­து­வ­தற்கே பொருந்­தாத கெட்ட வார்த்தை ஒன்­றையும் பல­முறை உச்­ச­ரித்­தது அரு­வ­ருப்­பா­னது.

முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார 1939ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 03ஆம் திகதி பிறந்து 76 வயதில் தனது அர­சியல் பய­ணத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்றார். தொழிற்­சங்­க­வா­தியும் சட்­டத்­த­ர­ணி­யு­மான அவர் ஜன­நா­யக இடதுசாரி முன்­ன­ணியின் தலை­வ­ரா­கவும் தமிழ் பேசும் மக்­களின் குர­லா­கவும் அநீ­தி­களை தட்­டிக்­கேட்கும் சிறந்த மனி­த­ரா­கவும் போற்­றப்­ப­டு­கின்றார்.

இத்­த­னையும் போதா­தென்று இன்னும் பல இலட்­ச­ணங்­களின் சொந்­தக்­கா­ர­ரான வாசு­ தேவ நாண­யக்­கா­ரவின் சம­கால செயற்­பா ட்டு நட­வ­டிக்­கைகள் முகம் சுழிக்க செய்­கின்­ற­ன­வா­கவே உள்­ளன. அர­சியல் ரீதியில் நலி­வுற்­றோரின் நண்­ப­ராக இருந்து வரும் வாசு இன்று இன­வாத தீ பற்­றி­யெ­ரி­வ­தற்கு எண்­ணெய்­யாக மாறி­யி­ருப்­பது ஏற்­கத்­த­குந்­த­தாக இல்லை.

வாசு­தேவ நாண­யக்­கார என்ற சிறந்த மனிதர் ஊடாக இன்­றைய இளைய தலை­மு­றை­யினர் கற்­றுக்­கொள்ள வேண்­டிய பல விட­யங்கள் இருப்­ப­தாக கூறப்­பட்டு வந்த நிலையில் தன்­னிலும் வயது குறைந்­த­வ­ரா­கவும் இந்­நாட்டின் கனவான் அர­சி­யல்­வா­தி­களின் சிறப்பு மிக்­க­வ­ரா­கவும் அதே நேரம் பிர­தமர் என்ற உயர் பத­வியை வகிக்­கின்­ற­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை உய­ரிய சபைக்குள் தரக்­கு­றை­வான வார்த்­தை­களால் விளித்து பாரா­ளு­மன்­றத்­துக்குள் பொருத்­த­மற்­றதும் அநா­க­ரி­க­மா­னதும் அரு­வ­ருக்­கத்­தக்­க­து­மான தகாதவார்த்­தையை ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வை­கள் பிர­யோ­கித்­தமை வாசு­தேவ நாண­யக்­கார என்ற சிறந்த மனி­தரின் சிறப்­புத்­தன்­மையை வீழ்ச்­சி­ய­டையச் செய்து விட்­ட­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

அவ­ரது வார்த்தை பிர­யோ­கங்­களும் பிர­த­மரின் மௌனமும் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான பரஸ்­பர வித்­தி­யா­சத்தை எடுத்­துக்­காட்டி விட்­டது. இந்­நி­லை­மை­யா­னது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க வின் மீது­மான காழ்ப்­பு­ணர்ச்­சித்­த­ன­மான செயற்­பாட்டை வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

ஜன­வரி மாதம் 8ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து இன்று வரையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பய­ணத்­து க்கு தடை­யா­கவே இருந்து வரு­கின்­றனர். அது மாத்­தி­ர­மின்றி ஜனா­தி­ப­தியின் முகத்தில் கரி யைப் பூசி விடு­வ­தற்கும் அவ­ரது காலை வாரி விடு­வ­தற்­குமே முயற்­சித்து வரு­கின்­றனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரா­கவும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ரா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இருக்­கின்­ற­மையால் தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும். எனினும் மேற்­கு­றிப்­பிட்ட இரு தரப்­புக்­க­ளுமே அவ்­வாறு கிடை­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ள­ரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரே­ராவும் இதற்கு விதி­வி­லக்­கல்ல என்­பதை அவரும் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை தேசிய அர­சாங்­கத்தின் அமைச்சுப் பொறுப்­புக்­களில் இருந்து டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா அபே­வர்­தன, பவித்­திரா வன்­னி­யா­ராச்சி, சி.பி.ரட்­நா­யக்க ஆகிய நால்­வரும் விலகிக் கொண்­ட­துடன் தமது தலை­மைக்கு ஏற்­காத வகை­யிலும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். வெகு விரை­வி­லேயே பாரா­ளு­மன்றம் கலை யப் போவது உறு­தி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே மேற்­படி நால்­வரும் அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­களில் இருந்து வில­கி­யுள்­ளனர் என்­பது குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது.

பாப்பரசர் பரி­சுத்த திருத்­தந்­தை­யி­ட­மி­ருந்து எளி­மை­யான அரச தலைவர் எனப்­பெயர் பெற்­றுள்­ள­வ­ரானா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சம­கால அர­சியல் களத்தில் மிகவும் மென்­மைத்­தன்­மை­யுடன் செயற்­பட்டு வரு­கிறார். அவ­ரது இத்­த­கைய செயற்­பா­டு­களே இத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு கார­ண­மாகும்.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சந்­தர்ப்பம் அறிந்து தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வதால் தவ­றுகள் ஏற்­பட்டு விடப்­போ­வ­தில்லை. இருந்த போதிலும் ஜனா­தி­ப­தி­யா­னவர் தனது துரோ­கி­க­ளுக்கும் இரங்­கு­ப­வ­ரா­கவே திகழ்­கின்றார். ஒரு நிமி­டத்­துக்குள் கரும மாற்றும் வல்­ல­மையும் அவ­ருக்கு உள்­ளது என்­பதை எவரும் மறந்து விடக்­கூ­டாது.

மேலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பத­வி­யி­னூ­டாக கிடைக்க பெறு­கின்ற வரப்­பி­ர­சா­தங்­களைப் பயன்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட முடி­யாது. அந்த வகை­யி­ல­மைந்­த­வாறு சட்ட திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அது மிக வும் சிறப்­பாக அமையும்.

இந்­நாட்டின் நீதித்­து­றைக்கும் கட்­டளை பிறப்­பிக்­கின்ற உய­ரிய சபை­யான பாரா­ளு­மன்­ற­மா­னது மேற்­போன்ற வரப்­பி­ர­சா­தங்­களைக் கொண்­ட­வர்­களால் கேலிக்­கூத்து நிலை­ய­மாக, கூத்­தா­டி­களின் கூட­மாக மாறுவதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. மக்கள் மத்­தியில் கும்­பிடு போட்டு தங்­களை கன­வான்­க­ளாக காட்டிக் கொண்டு கௌர­வத்தைப் பெற்­றுக்­கொள்­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு சில­ரது நட­வ­டிக்­கைகள், செயற்­பா­டுகள், வார்த்தைப் பிர­யோ­கங்கள் அனைத்தும் சொல் லால் வர்­ணிக்க முடி­யாத முகச்­சு­ழிப்­புக்கு ஒப்­பா­னவை. முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்­பான செயற்­பாடு தொடர்பில் இடது சாரிகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர். கண்டனம் தெரிவிப்பது ஒருபுறமிருக்க உள்ளுக்குள் வெட்கி நிற்கின்றனர் என்றே கூற வேண்டும்.

பாராளுமன்றத்துக்குள் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் அவரது மறுமுகத்தைக் காட்டி நிற்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்து நிற்கிறது. கற்ற சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் அரசியல் மேதைக்கும் இந்த இலட்ச ணம் பொருத்தமானதல்ல என்பதைக் கூற வேண்டும்.

இத்தகைய நிலைமைகளை மக் கள் புரிந்து அறிந்து தெளிதல் இன்றி யமையாததாகவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்லும்பட்சத்தில் யார் யாரை எப்படியானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பது என்பது தொடர்பில் மக் கள் உணர்வுபூர்வமான தீர்மானத்துக்கு வர வேண்டும்.

எமது நாட்டின் எதிர்காலம் குறித்து நாட்டு மக்களே சித்திக்க வேண்டும். பட்டம் பதவிக்காக ஏமாற்றுபவன் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது மக்களின் கைகளிலேயே உள்ளது. அது மாத்திரமின்றி நாட்டின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மக்களால் உணரப்பட வேண்டும். 

அவ்வாறான உணர்வு தூண்டப்படவும் வேண்டும். மக்களே இந்நாட்டின் சக்தி. அவர்களிடம் மாத்திரமே ஆக்கவும் அழிக்கவும் இயலுமை இருக்கின்றது. அடாவடித்தனம் புரிகின்ற அரசியல்வாதிகள், இனவாதிகள், பாசாங்கு காட்டுவோர், நேர்மையானவர்கள், மக்கள் சேவகன், நல்லவன், கெட்டவன் என அனை த்து தரப்பினரையும் மக்கள் அளந்தே வைத்து ள்ளனர் என்பதை புரிந்து கொண்டால் நல் லது.

ஏழாவது பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைகின்றது. எட்டாவது பாராளுமன்றத்திற்கு சிறந்த சமூகத்தை அனுப்பி வைக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளனினதும் கடமையும் பொறுப்பாகவும் அமைகிறது.

-ஜே.ஜி. ஸ்டீபன்