Breaking News

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் முயற்சி ஆரம்பம் - டெனிஸ்­வரன்

புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு மக்­க­ளுடன் இணைக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­க­ளுக்கு ஜூலை மாதம் முதல் அவர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்தை கொண்டு நடத்தும் தொழில் முயற்­சிகள் ஆரம்­பிக்­க­ப­ட­வுள்­ள­தாக வட­மா­காண மீன்­பிடி போக்­கு­வ­ரத்து அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்.மாவட்­டத்தில் உள்ள அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

மேற்­படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது அமைச்சின் கீழ், விடு­விக்­கப்­பட்ட அர­சியல் கைதிகள், எமக்­காக உயிர் நீத்த மாவீ­ரர்­களின் குடும்­பங்கள் மற்றும் புனர்­வாழ்வு பெற்று சமூ­கத்­துடன் இணைந்­தவர்கள் ஆகி­யோ­ருக்­கான வாழ்­வா­தார தொழில் முயற்­சி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அனைத்து மாவட்­டங்­க­ளிலும் இருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டன. அவற்றில் சுமார் 45ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட விண்­ணப்­பங்கள் தர­வு­களின் படி விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் முதற்­கட்­ட­மாக 13ஆயிரம் விண்­ணப்­பங்கள் முழு­மை­யாக கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

கிடைக்­கப்­பெற்ற விண்­ணப்­பங்­களில் 5 மாவட்­டங்­க­ளிலும் உரி­ய­வர்­களை மாவட்ட ரீதி­யாக சந்­தித்து அவர்கள் ஈடு­ப­ட­வுள்ள தொழில்­மு­றை­களை கண்­ட­றிந்து உள்ளூர் வளங்­களை பயன்­ப­டுத்தி தொழில் வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­விகள் கொள்கை ரீதி­யாக வழங்­கப்­படும். இதற்கு பிர­த­மரும் தயா­ராக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­துடன் இதற்­கான முன்­னேற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். இதற்­காக நாமும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­களும் தொண்டர் அமைப்­புக்­களும் மற்றும் தூத­ர­கங்­களும் உதவி செய்ய தயா­ராக உள்­ளனர்.

எனது அமைச்சால் இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரத்தை வழங்­கு­வ­தற்கு 43 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­துள்ளேன். முடிந்­த­வரை நான் பொது­மக்­க­ளுக்கு கூறு­வதை செய்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் செயற்­பட்டு வரு­கின்றேன்.

எதிர்­கா­லத்தில் இத்­த­கை­ய­வர்கள் மற்­ற­வர்­க­ளிடம் கையேந்­தாத நிலைக்கு அவர்­களை உயர்த்­துவேன். புனர்­வாழ்வு பெற்­ற­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் விசேட திற­மை­களை கொண்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு ஏற்ப உத­வித்­திட்டம் வழங்­கப்­படும்.

மேலும் பலரும் பல திட்­டங்­களை பெரும் எடுப்­பாக செய்­து­வ­ரும்­போது 3 முதல் 4 மாதத்­திற்குப் பின்னர் இவை பல­னில்­லாத நிலையே காணப்­ப­டு­கி­றது. ஆகவே நாம் வழங்கும் திட்­டங்­களை முறை­யாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு குழுக்­களை அமைத்து கண்­கா­ணிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

மேலும் தொண்டு நிறுவனங்கள் இத்தகையவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றன. இவர்கள் திட்ட முன்மொழிவுகளை தந்தால் அதற்கான முழு உதவிகளையும் செய்து தருவதாக தெரிவித்துள்ளன. எனவே நாம் இவர் களுக்கான வேலைத்திட்டங்களை வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.