Breaking News

மஹிந்தவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் 6 பேரை நீதிமன்றில் நேரில் முன்னிலையாக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நேற்று இடம்பெற்ற அமர்வில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர்களான பிரியசத் டெப், எவா வனசுந்தர ஆகியோர் தலைமையில் நடந்த அமர்விலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தல் காலமான ஜனவரி 3, 8, 9 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது என முன்னிலை சோஷலிஷக் கட்சியின் துமிந்த நாகமுன தொடுத்த வழக்கில் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி முன்னிலையாகுமாறு தெரிவித்தே நோட்டீஸ் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.