Breaking News

அறிக்கையை தாமதப்படுத்த இலங்கை உறுதிமொழிகளை வழங்கியதாம் – அமெரிக்கா வாக்குமூலம்

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.

அதனால் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை குறித்த அறிக்கையை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வெளியாகும் போது அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுலாக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.