இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கிளார்க் பங்குபெறமாட்டார்
உலகக் கிண்ணத்தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடா ன அவுஸ்திரேலியா இங்கிலாந்தைச் சந்திக்கின்றது. இப்போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் ஆஸி.யின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என பயிற்சியாளர் டரன் லீமன் அறிவித்துள் ளார்.
நேற்று முன்தினம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் கிளார்க் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 64ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அவ்வாறிருக்கையில் சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள அவருக்கு காயத்தின் தாக்கம் தொடரக்கூடாது என்பதற்காக இந்தப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.