Breaking News

யாருக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிபணியமாட்டாது


இலங்­கையை அச்­சு­றுத்­து­வ­தற்கு ஐ.நா. சர்­வ­தேச
விசா­ரணைக் குழு­வுக்கு அதி­காரம் கிடை­யாது. அந்த அச்­சு­றுத்­த­லுக்­கெல்லாம் நாம் அடி­ப­ணி­ய­மாட்டோம் என தெரி­வித்த அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வினர் அர­சாங்­கத்தின் அழைப்பை ஏற்றே இங்கு வரு­கின்­றனர் என்றும் தெரி­வித்தார்.

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவிப்­பிள்ளை இங்கு இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக அமைத்த சர்­வ­தேச விசா­ரணைக் குழுவை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

பாரா­ளு­மன்­றத்­திலும் இது தொடர்­பான பிரே­ர­ணையை கொண்டு வந்து சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவை நிரா­க­ரித்­துள்ளோம். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் சர்­வ­தேச விசா­ரணைக் குழுவின் நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான பாகிஸ்­தானை சேர்ந்த அஸ்மா ஜஹாங்ஹிர் விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைக்காவிட்டால் அது அந்­நாட்­டுக்கே பாதகம் எனக் கூறி­யுள்ளார்.

இது எம்மை அச்­சு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்த முனையும் செய­லாகும். அவ்­வாறு அச்­சு­றுத்தல் விடு­வ­தற்கு எவ­ருக்கும் அதி­காரம் கிடை­யாது. அத்­தோடு அவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு நாம் அடி­ப­ணிய போவதும் இல்லை என்­பதை சொல்லி வைக்க விரும்­பு­கின்றேன்.

ரம­போஷா இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பை ஏற்றே தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வினர் இங்கு வரு­கின்­றனர். அர­சுக்குள் இதற்­கெ­தி­ரான கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். ஆனால் எமது தேசிய பிரச்­சி­னையில் தீர்­வுக்கு தென்­னா­பி­ரிக்­காவின் அனு­பவங்­களை பகிர்ந்து கொள்­வதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை. அக் குழு­வி­னரின் வருகை புதி­ய­தொரு பய­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்கு ஏது­வாக அமையும். தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு என்ற பிள்ளை பிறக்க வேண்டும்.

அதனை நான் எதிர்­பார்த்­துக்­கொண்டே இருக்­கின்றேன் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தீர்­மானம் எடுப்­பதில் சிக்கல் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பான விட­யங்­களை அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாய் இருக்­கின்­றனர். எனவே ஜனா­தி­பதி கூட்­ட­மைப்­பி­னரை அழைத்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்டும். இதன்­போது உறுதி மொழி­களை வழங்­கக்­கூ­டாது.

முன்­னைய பேச்­சு­வார்த்­தை­களை மீளாய்வு செய்ய வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு சூழ்­ நி­லையில் கூட்­ட­மைப்­பினர் நம்­பிக்­கை­யோடு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரக்­கூடும். அதனை ஜனா­தி­பதி ஏற்­ப­டுத்த வேண்டும். பிரி­வுகள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் விடு­தலைப் புலி­க­ளி­னதும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­னதும் ஈழக் கோரிக்­கையை வலி­யு­றுத்தும் கடும்­போக்கு பிரிவு ஒன்­றுள்­ளது. அதே­போன்று மித­வா­தப்­போக்­கு­டைய ஒரு பிரிவும் உள்­ளது.

இன்று புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்கள் துண்டு துண்­டாகப் பிரிந்­துள்­ளன. எதிர்­கா­லத்தில் இப்­பி­ரி­வு­களில் ஈழக்­க­னவும் தவிடு பொடி­யாகி விடும். அதே­போன்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கடும் போக்­கா­ளர்­களும் பின்­ன­டைவைக் காண்­பார்கள். பின்னர் இயல்­பா­கவே பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும். யுத்த வெற்றி முப்­பது வருட கால பயங்­க­ர­வா­தத்தை நாட்­டி­லி­ருந்து ஒழித்­தது ஒரு வர­லா­றாகும். அந்த வர­லாறு மறக்­கக்­கூ­டி­ய­தல்ல. இதனை யுத்த வெற்றி எனக்­கூ­று­வதை விட பயங்­க­ர­வாதம் ஒழிப்பு என்றே கூற வேண்டும்.

எனவே, அதனை மறப்­ப­தற்கு காலம் எடுக்கும். அளுத்­கம அளுத்­கம, பேரு­வளை சம்­ப­வங்­க­ளுக்கு பாது­காப்பு பிரி­வி­ன­ரதும் அர­சி­னதும் அசமந்தப்போக்கும் செயல்திறனின்மையும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், ஐ.தே.கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதனை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான இனவாத குழப்பங்களுக்கு முன்னுதாரணம் காட்டியவர்கள் ஐ.தே.கட்சியினர். ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தில் தான் இனவாதம் உச்சக்கட்டத்தில் தாண் டவமாடியது என்றார்.