Breaking News

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது.!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை களைப் பயன்படுத்தி இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையி னர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிட மும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், மேலதிக விசாரணை களுக்காக யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நட வடிக்கை எடுத்துள்ளனர்.